
6 persons arrested for assaulting student in Nanguneri
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவனையும் அவனது தங்கையும் வீடு புகுந்து.
அதே பள்ளியில் படித்த 4 மாணவர்கள் மற்றும் இடை நின்ற 2 மாணவர்கள் என 6 நபர்கள் அதிரடியாக.
அந்த மாணவனை கொடூரமான ஆயுதத்தால் வெட்டியும் அவரது தங்கையும் வெட்டியும்,ஒரு முதியவரை கீழே தள்ளியும் கொலை செய்துள்ளார்கள்.
இந்த கொடூர சம்பவம் இன்று தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தேரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி இவரது மனைவியின் பெயர் அம்பிகா.
இந்த தம்பதிகளுக்கு பெண், ஆண் குழந்தை உள்ளது,ஆண் குழந்தையின் பெயர் சின்னதுரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தங்கையின் பெயர் சந்திரா செல்வி இவருக்கு 14 வயது நடக்கிறது,இவரும் அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் சின்னதுரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதிரியாக சில கொடுமையான செயல்பாடுகளை செய்தும் துன்புறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் மணமடைந்த சின்னதுரை பள்ளி செல்ல மறுத்துள்ளார், வீட்டில் முடங்கியுள்ளார்,இதைப்பற்றி சின்னதுரை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதன்பிறகு இவரது தாய் அந்த பள்ளி நிர்வாகம்,தலைமை ஆசிரியரிடம் சின்னதுரையை துன்புறுத்திய மாணவர்களை பற்றி புகார் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை செய்த தலைமை ஆசிரியர்
இந்த நிலையில் தான் தலைமை ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து கண்டித்து எச்சரிக்கை செய்து உள்ளார்,இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் மற்றும் அதே பள்ளியில் படித்து இடைநிலை 2 மாணவர்களும் கூட்டு சதி திட்டம் செய்து.
சின்னதுரை மற்றும் அவரது தங்கை வீட்டிற்குள் இருக்கும் போது அதிரடியாக நுழைந்த அந்த 6 மாணவர்கள் சின்ன துறையை அறிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டி உள்ளார்கள்.
இதனை தடுக்க சென்ற அவரது தங்கையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது,இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளனர்.
இவர்களை தடுக்க சென்ற அங்கிருந்த முதியவரை இவர்கள் வேகமாக கீழே தள்ளியுள்ளார்கள்.
கீழே விழுந்த முதியவர் அதே இடத்தில் உயிர் இருந்துள்ளார்,இந்த கொடூர சம்பவம் இன்று நிகழ்ந்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
6 நபர்களும் சிறார்கள் என தெரிய வந்துள்ளது
இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் 6 நபர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் என்பதால் கண்காணிப்பு இல்லத்தில் காவல்துறை அழைத்துச் சென்றுள்ளார்கள்.
கைதானவர்கள் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தமிழ்நாட்டை கதற வைத்துள்ளது,இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள்,நடிகர்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்புகளை, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Honda CD 110 dream Deluxe specifications
Top 3 companies in India for you to invest
Top 5 Best Electric Scooters List in India..!