
Advice for DMK executives published in Murasoli
கட்சிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டால் உற்ற நண்பர்களாக இருந்தாலும் திமுக அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும்..!
இனி உங்களுக்கு எந்த சாதி அடையாளமும் இருக்கக் கூடாது திமுக தான் உங்கள் சாதி, கட்சி தொண்டர்கள் தான் உங்கள் சாதிசனம் என்ற எண்ணத்தோடு.
பணிகளை கண்ணியமாக நேர்மையுடன் தொடர வேண்டும் என திமுகவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு.
அறிவுரை வழங்கி திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
திமுகவின் 15-ஆவது உட்கட்சி தேர்தல், மாவட்ட ஒன்றிய, நகர பேரூர், கிளை அமைப்புகள் என அனைத்து நிலைகளிலும் முடிவடைந்த புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமை கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள நிர்வாகிகள் தங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
என்று திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் ஒரு கட்டுரை இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தான் உங்களுடைய சாதிசனம்
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் திமுகவில் 15வது உட்கட்சி தேர்தல் மூலம் புதிதாக பொறுப்பேற்க உள்ள நிர்வாகிகளுக்கு.
அறிவுரை வழங்கும் வகையில் முரசொலியில் செல்வம் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் புதிய பொறுப்புகளை ஏற்பவர்கள் தலைமைக்கு காட்டும் விசுவாசத்தை கடைக்கோடி கழக தொண்டர்களுக்கு காட்ட வேண்டும்.
உங்களுக்கு எந்த சாதி அடையாளமும் இருக்கக்கூடாது.
திமுக கழகம் தான் உங்களுடைய சாதி, கழக தொண்டர்கள் தான் உங்கள் சாதிசனம் என்ற எண்ணத்தோடு உங்கள் பணிகளை தொடர வேண்டும்.
பல தோல்விகளை சந்தித்த கட்சி
உங்களில் பலர் முன்பே பொறுப்பில் இருந்தவர்களாக இருக்கலாம் இன்னும் பலர் பொறுப்புக்கு புதியவர்களாக இருக்கலாம்.
இருந்தவர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களும் எதிர்கொள்ளவேண்டிய கடுமையான சோதனை காலம் இது.
நம்மளுடைய இயக்கத்தை போன்ற பெரும் வெற்றி பெற்ற இயக்கமும் இல்லை, அதேபோன்ற தோல்விகளை சந்தித்த இயக்கமும் இல்லை.
உற்ற நண்பர்களாக இருந்தாலும்
குடும்பப் பாச உணர்வோடு எல்லாரையும் அழைத்து சென்றாலும் தன்னுடன் உள்ள.
நெருக்கத்தை தவறாக பயன்படுத்தி கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்பட நினைத்தவர்கள்.
உற்ற நண்பர்களாக இருந்தாலும் தனது குடும்பத்தோடு ஒட்டி இருப்பவர்களாக இருந்தாலும்.
அவர்களை உதறித்தள்ளி கட்டுப்பாட்டை காத்து வருபவர் இன்றைய தலைவர் தளபதி ஸ்டாலின்.
மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்
பொறுப்பேற்க இருக்கும் ஒவ்வொருவரும் மனதில் பதிய வைக்க வேண்டியது எந்தெந்த தனிமனிதனின் செல்வாக்காலும் வளர்ந்த இயக்கமல்ல திமுக.
அதுவும் இதனைத் வளர்த்தவர்கள் மிக மிக சாமானியர்கள் அவர்களிடமிருந்து ஒரே பலம் லட்சியம் பலம்தான்.
அதன் முன்னணி தலைவர்கள் யாருக்கும் பின்னணியில் சாதி பேதம் கிடையாது.
இயக்கத்தை வளர்த்து பதவிகளைப் பெற துவங்கப்பட்ட இயக்கம் அல்ல இது.
இது தொடங்கிய காலத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணம் கூட இல்லை.
ஓசி பஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
சாதி மதம் அடையாளமே இல்லை
இந்த இயக்கத்தால் அன்று ஈர்க்கப்பட்ட இணைந்தவர்கள் அத்தனை பேரும் ஒரு பஞ்சாயத்து தலைவர் ஆகலாம் என்ற எண்ணம் கூட இல்லாத அர்ப்பணிப்பு உணர்வோடு.
ஒன்றோடு தான் தங்களை இணைத்துக் கொண்டனர் நமது அரசியல் இயக்கம் வளர்ச்சி சாதிய மதத்தையோ சேர்ந்தது இல்லை.
10 times increase transport service charge in tn
அதன் கொள்கை அடிப்படையில் அமைந்தது சாதி மத அரசியல் நடத்தி நம்மை பிரித்து சந்தோஷப்படலாம் என்று இருக்கும் கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருப்போம்.
எல்லோருக்கும் எல்லாம் இன்னும் திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில்.
உங்கள் பணி அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.