
Andhra Hindu organization strongly condemns Udhayanidhi Stalin
அமைச்சர் உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் ரூபாய் 10 லட்சம் பரிசு ஆந்திரா இந்துத்துவ அமைப்பு புதிய அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..!
சனாதனத்தை ஒழிப்போம் என உறக்கமிட்ட தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னத்தில் காலணியால் அடித்தால் ரூபாய் 10 லட்சம் பரிசு கொடுக்கப்படும்.
என ஆந்திராவை சேர்ந்த இந்துத்துவ அமைப்பு ஒரு அறிவிப்பை தற்போது அதிரடியாக வெளியிட்டுள்ளது.
சனதனத்தை அடியோடு ஒழிப்போம் என சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான திரு உதயநிதி ஸ்டாலின் முழக்கமிட்டார்.
அவரது இந்த முழக்கம் இந்தியா முழுவதும் பெறும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,ராஜனன்சிங் உள்ளிட்ட பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று அவசரமாக கூடி இது தொடர்பாக விவாதித்தது.
அப்போது சனாதனம் குறித்த விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி சக அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என தெரிவித்தார்கள்.
இந்தியா முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த அகோரி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி சீவினால் ரூபாய் 10 கோடி பரிசு தரப்படும் என அறிவித்து ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் எனக்கு ரூபாய் 10 சீப்பு போதும் தலையை சீவ தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்தவர்கள் நாங்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.
நாங்கள் கலைஞர் வழியில் தோன்றியவர்கள் என தெரிவித்தார் ஆனாலும் அடங்காத அயோத்தி சாமியார் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால்.
மேலும் 10 கோடி தருவேன் என உருக்கமாக கொக்கரித்தார் அந்த சாமியாருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தமிழகத்தில் இருந்து கடுமையான கண்டனங்கள் கிளம்பியது.
தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த Jana Jagarana samithi என்ற இந்துத்துவ அமைப்பு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு கடுமையான சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அதில் சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய தமிழ்நாடு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் கன்னத்தில் காலணியால் அடித்தால் ரூபாய் 10 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என ஆந்திராவில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அத்துடன் உதயநிதி ஸ்டாலின் படத்தையும் அவர் முகத்தில் காலணியால் அடிப்பது போன்ற படத்தையும் போட்டு விஜயவாடா தெருக்களில்.
அந்த அமைப்பு போஸ்டர்களை ஒட்டி இருப்பது ஆந்திரா முழுவதும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
1000/- கலைஞர் உரிமைத்தொகை பெண்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி..!
மின்சார பில்லை பார்த்து கதி கலங்கும் மக்கள்..!
எல்ஐசி பாலிசி காலாவதியான பின்பு மறுபடியும் புதுப்பிப்பது எப்படி..!