செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000/- எப்படி விண்ணப்பிக்கலாம் ஆதார் குடும்ப அட்டை இல்லை என்றால் How to apply for magalir urimai thogai 1000 scheme

How to apply for magalir urimai thogai 1000 scheme

How to apply for magalir urimai thogai 1000 scheme

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000/- எப்படி விண்ணப்பிக்கலாம் ஆதார் குடும்ப அட்டை இல்லை என்றால் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்..!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்க திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் 15 ஆம் தேதி முதல் மிகப் பிரமாண்டமாக தொடங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதற்கான விண்ணப்பபடிவங்கள் எப்படி பெறப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை திரு. மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம் தோறும் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

எதிர்க்கட்சிகளும் கூட இது குறித்து பல்வேறு வகையான கேள்விகளை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் 1,000/- ரூபாய் என்பது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகள் இருக்கிறது இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல் ஸ்டாலின்.

பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது என்றும்.

அப்போது முதல் மாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார் இதற்கு முத்தமிழ் அறிஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும்.

இந்த திட்டத்திற்கு கடந்த பட்ஜெட்டில் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஒவ்வொரு துறையின் பங்களிப்பு குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய கால கணக்கெடுப்புக்குள் இதற்கான அனைத்து பணிகளும் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் இத்தனை பெரிய திட்டம் கொண்டுவரப்படுகிறது இதுவே முதல் முறை இதை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட தலைவர்கள் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த திட்டம் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி செயல்படுத்தப்படுகிறது.

அதற்கு இன்னும் சில மாதங்களை இருப்பதால் இப்போது வேகமாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் குறித்த தகவல்கள்

1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் விண்ணப்பங்களை பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் சாலைகளில் குடியிருப்போர்,பழங்குடியினர்,தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றோர்,இதில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இல்லை என்றாலும் அதை பெறுவதற்கு இந்த திட்டம் கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும்.

தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவில் இந்த திட்டத்தை கண்காணித்து ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு இதற்கான பணிகளை செய்யும்.

இதன் மூலம் மாநிலத்தில் இருக்கும் பெண்களின் நிதி நிலை மாறும் என அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் சுமார் 1 கோடி மக்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என்பது உண்மையான விஷயம் இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு எப்படி பணம் வழங்கப்படும்.

வங்கிக் கணக்கு மூலமாகவா அல்லது நேரடியாக வழங்கப்படும் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.

எப்பொழுது ரேஷன் கடைகளில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்பது குறித்தும் வெளியிடப்படவில்லை.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

High mileage two wheelers in india 2023

What is POCSO Act in full details in tamil..!

Best cooking oil for heart health in tamil..!

What is your reaction?

Excited
8
Happy
11
In Love
5
Not Sure
6
Silly
6