
How to apply personal loan in tamil
கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு இந்த பதிவில் கூட்டுறவு வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் தனிநபர் கடன் பெறுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வீட்டின் பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக பல இடங்களில் கடன் பெறுவதற்கு வங்கிகளில் மொத்தமாக பெரும்தொகையாக லோன் எடுப்பது சிறந்தது என்று பல நபர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசானது இதற்கு முன்பு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 3 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்பட்டு வந்தது.
அதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் அரசிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வங்கி ஊழியர்களுக்கு 3 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டது கடன் தொகை.
கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குவதற்கு என்னென்ன விதிமுறைகள்,கடன் தவணைகள் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
தனிநபர் கடன் விவரங்கள்
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அவர்களின் நலனை கருத்தில்கொண்டு குறிப்பிட்ட அளவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டு வந்தது.
கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 3 லட்சம் ரூபாய் தனியார் கடனும், நகர கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடன் வழங்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் அரசிடம் பலமுறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க.
வங்கியில் வேலை பார்ப்பவர்களுக்கு 3 லட்சத்திலிருந்து 6 லட்சமாக தமிழ்நாடு அரசு இதனை உயர்த்தியது.
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடன் தொகை 6 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து சில வேலையாட்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களும் சில மண்டல இணைப் பதிவாளர்களாலும்.
பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்களும் சில மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் முன்னேற்ற சங்கங்களும்.
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தனிநபர் கடனானது 12 லட்சத்திலிருந்து ரூபாய் 15 லட்சமாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இருந்தாலும் இத்தகைய கடனை பெறுவதற்கு தமிழக அரசானது பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது, அவற்றைக் கீழே நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அரசின் நிபந்தனைகள் என்ன
கூட்டுறவு வங்கியில் பெறப்படும் தனிநபர் கடன் தவணை காலமானது 120 மாதங்களுக்குள் (10 ஆண்டுகளுக்குள்) உட்பட்டதாக இருக்க வேண்டும்.
கடன் வேண்டி விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு வயது அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகபட்ச கடன் அளவு ரூபாய் 15 லட்சம் அல்லது ஊழியர்கள் பெறக்கூடிய முழு ஊதியத்தில் 25 மடங்கு, இதில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகையை கடனாக வழங்கப்படும்.
வழங்கப்படவேண்டிய கடன் தொகையில் பத்தில் ஒரு பங்கு பங்கு தொகையாக கடனை பெறக்கூடிய நபர்களிடமிருந்து பெற வேண்டும்.
மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று வழங்கும் சங்கங்கள் 5 சதவீத பங்குதொகை பதிவாளரின் சுற்றறிக்கை.
எண் : 1 / 2019 (ந .க .59115 / 2018 / வஆ 1) நாள் 30.01.2019 -இல் தெரிவிக்கப்பட்டுள்ளது கடனை கட்டாயம் வசூல் செய்ய வேண்டும்.
பணியாளர்களின் முழு சம்பளத்திலிருந்து அனைத்து பிடித்தங்கள் பிடிக்கப்பட்டு கடனாளர் வீட்டிற்கு கொண்டு செல்லும் சம்பளம் அவர்களுடைய மொத்த சம்பளத்தில் 25 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது.
வீட்டுக் கடன் முதல் கார் லோன் வரை எந்த வங்கியில் குறைவான வட்டி.
பணியாளர் வேலை செய்யும் பணி இடம், சம்பளம் வழங்கும் அலுவலர்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி பிறகுதான், கடன் தொகை உரியவரிடம் வழங்கப்படும்.
Top 10 things hurt your heart in tamil
பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் சங்கத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட சரக துணை பதிவாளர்களிடம்.
தக்கதுணை விதித்திருத்தங்கள் மேற்கொண்டு பதிவு செய்த பின்னரே புதிய உத்தரவின் அடிப்படையில் கடன் வழங்கப்பட வேண்டும்.