
How to get Mudra loan for small business full details
தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்..!
சிறு, குறு, உற்பத்தி சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு எந்த ஒரு சொத்து பணயம் இல்லா வங்கி கடன் பெறும் திட்டம் முத்ரா கடன்.
இதில் குறைந்தபட்சம் ரூபாய்.10,00,000/- கடன் பெற்றுக் கொள்ள முடியும், இந்தத் திட்டத்தில் இணைய என்ன தகுதி வேண்டும், என்னென்ன ஆவணங்கள் வேண்டும்.
திட்டத்தில் எப்படி இணைவது, என்ன மாதிரியான தொழில் செய்தால் இந்தத் திட்டத்தில் இணையலாம், என்ற முழு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறு,குறு, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
அரசுகள் செயல்படுத்த திட்டங்களை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டால், நீங்கள் தொழில் செய்தால், மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கடன் முழு விவரங்கள்
(mutra tholil Kadan) சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிக்கு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தான், இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டம்.
இது குறுந்,தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் (Micro Units Development and Refine Agency) (MUDRA)மூலம் செயல்படுத்தப்படுகிறது.
முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி இல்லை, அது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய திட்டம்மாகும் நிதியமைச்சர் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் நிதி ஆண்டில் இதனைப்பற்றி வெளியிட்டார்.
தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருளாதார நிதி வழங்குவது தான் இதன் முக்கிய நோக்கமாகும் 2015 மற்றும் 16ம் நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இந்த திட்டத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சேவைகள்
முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு அவர்களின் தொழிலை மேம்படுத்தவும் விரிவுபடுத்திக் கொள்ளவும் உதவுகிறது.
சிசு, கிஷோர், மற்றும் தருண் ஆகிய முறைகளில் கடனுதவி வழங்கப்படுகிறது.
சிசு(SHISHU) முத்ரா வங்கி திட்டம்-இத்திட்டத்தின் மூலம் ரூபாய் 50,000/-வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.
கிஷோர் (KISHOR) முத்ரா வங்கி திட்டம்-இத்திட்டத்தின் மூலம் ரூபாய் 50,000/- முதல் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
தருண்(TARUN) முத்ரா வங்கி திட்டம் -இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 5 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.
கடன் பெறுவதற்கான தகுதிகள்
10 லட்சத்திற்கு குறைவான கடன் தேவைப்படும் சிறு மற்றும் குறு தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு.
பொதுவுடமை வங்கிகள், தேசிய வங்கிகள், மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள், மூலம் இதற்கு கடன் வழங்கப்படுகிறது.
திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்
அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் நபர்கள், இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.
சிறிய சரக்கு வாகனம் வைத்திருக்கும் நபர்கள், முடி திருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை விரிவுபடுத்துதல்.
சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி கடைகள், துணிக்கடைகள், கோழிப்பண்ணை, ஆடு, மாடு, வளர்த்தல், மீன் பண்ணை, பால் பண்ணை தொழில், என அனைத்தும்.
புதிய மற்றும் ஏற்கனவே தொழில் நடத்தும் நபர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
ஏற்கனவே முதலீடு செய்து தொழில் நடத்தும் நபர்களுக்கு வங்கிகள் கடனுதவி தர முன்வருவதில்லை, அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கு அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் வாய்ப்புகள் கிடைக்கும்.
கடன் பணமாக கிடைக்காது அதற்கு பதிலாக இயந்திரம், பொருள், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி, என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் பட்டியல் கட்டாயம் கொடுக்க வேண்டும், அதன் அடிப்படையில் மட்டுமே கடன் கிடைக்கும்.
உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் கட்டாயம் நிரூபிக்க வேண்டும், இதில் கடன் பெற வேண்டும் என்றால், இதனை பற்றி உங்கள் வங்கி மேலாளர் மட்டுமே இறுதியாக முடிவு செய்வார்.
உங்களுடைய சொந்த செலவு, வீட்டு செலவு, உங்கள் வீட்டில் நடக்கும் திருமண மற்றும் சில செலவு போன்றவற்றிற்கு இந்த திட்டத்தில் கடன் கிடைக்க முற்றிலும் வாய்ப்புகள் இல்லை.
திட்டத்தில் நீங்கள் பயன் பெற செய்ய வேண்டியவை
இந்த திட்டத்தில் நீங்கள் கடன் பெற வேண்டும் என்றால் உங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளையில் சென்று இதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுக்க வேண்டும்.
திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் வயது வரம்பு 18 முடித்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் மூன்று பிரிவுகளின் கடன் பெற்றுக் கொள்ளலாம், அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்களது தொழிலை கொண்டு முடிவு செய்து விடுவார்.
எந்த விதமான அரசு மானியம் வழங்கப்படுவதில்லை, இது முழுக்க முழுக்க ஒரு தொழில் சார்ந்த கடன் திட்டம் மட்டுமே.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயிக்கப்படும்.
நீங்கள் தொழிலுக்காக வாங்கும் கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்தலாம் கடனை (EMI) மாதத் தவணை மூலம் வங்கிகணக்கீடு செய்து தெரிவிக்கவும்.
கடனை சரியாக திருப்பி செலுத்தும் பட்சத்தில் உங்களுடைய தொழில் நன்றாக நடக்கும் பொழுது மேற்கொண்டு.
அதனை விரிவாக்கம் செய்து கொள்ள மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்தும் உங்களுக்கு கடனுதவி வழங்கும்.
நீங்கள் ஏற்கனவே தொழில் நடத்தும் நபராக இருந்தால் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் உங்களின் மீது எந்த வங்கியிலும் கடன் சார்ந்த பிரச்சினைகள் இருக்கக்கூடாது.
இந்த திட்டத்தில் சொத்துப் பிணையம் மற்றும் தனி நபர் ஜாமீன் தேவையில்லை கடன் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ள முடியும்.
நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வங்கிகளையும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 25 நபர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தில் கடனுதவி வழங்க வேண்டும், அதிகபட்சம் எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் கடன் உதவி வழங்கலாம்.
விலைப்பட்டியல்லுடன் நீங்கள் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.
இந்த முத்ரா கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடனுதவி வழங்குகிறது.
கடன் வழங்கும் வங்கிகளின் விவரங்கள்
25 Non Banking Financial Companies (NBFCs)
36 Micro Finance Institutions (MFIs)
4 Co-operative Banks
17 Private Sector Banks
27 Public Sector Banks
31 Regional Rural Banks (RRBs)
உதவி பெற தேவைப்படும் ஆவணங்கள்
அடையாளச் சான்று
இருப்பிடச் சான்றிதழ் (சமீபத்தியது) தொலைபேசி ரசீது, மின் கட்டண ரசீது, வீட்டு வரி ரசீது.
சமிபத்தில் எடுத்த புகைப்படம்
இயந்திரம் மற்றும் இதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது
விநியோகஸ்தர்கள் விவரங்கள்
தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் அதற்கான உரிமம்
சாதிச்சான்று போன்றவை
இந்த திட்டத்தின் கடன் அட்டை
திட்டத்தில் கடன் கிடைத்த பயனாளிக்கு அதற்கான மூத்ரா கடன் அட்டை வழங்கப்படும், இந்த அட்டை மூலம் பொருட்கள் வாங்கும் போது இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி எப்படி அளவிடப்படுகிறது.
இந்த கார்டு மூலம் கடன் தொகையில் 10 சதவீதம் அதிகபட்சம் ரூபாய்10,000/- வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் சில முக்கிய குறிப்புகள்
நீங்கள் வங்கி மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நலம் கடனுக்கு தேவையான சரியான விளக்கத்தை நீங்கள் தரவேண்டும் வங்கி மேலாளரின் முடிவே இறுதியானது.
What are the benefits of palm tree in tamil
விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும், நோடல் அதிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் போன்ற அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.