
information announced by Edappadi Palaniswami
உருகிய எடப்பாடி கண்கலங்கிய தொண்டர்கள் ஓபிஎஸ் எதிராக ஒன்று சேரும் அதிமுக தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள்..!
எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அதிமுக தொண்டர்கள் கண்கலங்கி விட்டார்கள்.
ஒட்டன்சத்திரம் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி கே பழனிசாமி அங்கு உருக்கமாக பேசினார்.
ஒருபுறம் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.
மறுபுறம் கட்சிக்குள் தனது ஆதரவை வலுப்படுத்த எடப்பாடிபழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு எப்போதும் தொண்டர்களுடன் இருந்து வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அதிமுக தொண்டர்கள் கண்கலங்கி விட்டார்கள்.
திடீரென்று உருக்கமான பேச்சு ஏன்
ஒட்டன்சத்திரம் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி கே பழனிசாமி அங்கு சற்று சுருக்கமாக பேசினார்.
திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது மற்றும் பிளவு படுத்த முடியாது.
அதிமுக என்னும் மிகப்பெரிய ஒரு ஜனநாயகத்தை உடைப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கிறது.
குறிப்பாக திமுக ஓ பன்னீர் செல்வத்தை வைத்து அதிமுக என்ற ஒரு மாபெரும் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கு திட்டங்கள் தீட்டுகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக ஓபிஎஸ் மகன் அடிக்கடி திமுக கட்சி பக்கம் பேசுவது திமுக கட்சியை பாராட்டுவது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது.
அதிமுக பொதுக்குழுவில் விவரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் அவர் சென்னைக்கு செல்ல திருச்சி விமான நிலையம் வந்தார்.
எடப்பாடி பழனிசாமி அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து சில தகவல்களை வெளியிட்டார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நாங்களும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம்.
திமுகவுடன் நெருங்கிய தொடர்பு
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த சிறந்த திட்டமாக இருக்கின்ற தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை முழுவதும் ரத்து செய்துவிட்டு.
புதுமைப் பெண் என்ற திட்டத்தை இப்பொழுது திமுக அரசு கொண்டு வந்துள்ளது.
அந்த திட்டத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்துள்ளார் அவர் திமுகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கிறார் என்பதை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார்.
திமுகவுடன் உள்ளனர் நெருக்கத்தை சில நேரங்களில் அவர் வெளிப்படுத்துகிறார்.
பழனிசாமியின் பேச்சில் மறைந்துள்ள தகவல்கள்
நான் பொறுப்பேற்றதில் இருந்து அதிமுகவை கட்டுக்கோப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் ஆட்சியைக் காப்பாற்ற நான் கடுமையாக போராடிக் கொண்டிருந்தேன்.
ஆட்சியில் இருக்கும்போதும் போராடிக் கொண்டிருந்தேன் தற்போது எதிர்கட்சியாக இருக்கும் போதும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றேன் என்று உருக்கமாக பேசினார்.
ஓ பன்னீர்செல்வம் போன்ற முக்கிய நிர்வாகிகள் பணத்திற்காக அதிமுகவை அழிப்பதற்கு திமுகவுடன் கைகோர்த்து உள்ளார்கள்.
ஆமணக்கு இலையின் ஆரோக்கிய நன்மைகள்
இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது இந்த கட்சியை காப்பாற்றி கட்டுக்கோப்புடன் வழி நடத்தி.
தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Salem to Chennai 8 way road Project again starting
அதிமுக என்னும் சிறந்த ஜனநாயகத்தை யாராலும் அழிக்க முடியாது அது மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வரும் அதுமட்டுமில்லாமல் சிறந்த நபரிடம் வரை சென்று சேரும் எனவும் அவர் தெரிவித்தார்.