
Nithyananda soon arrested and back to India
மீண்டும் நித்யானந்தா கைலாசாவிலிருந்து கூண்டோடு தூக்கும் சர்வதேச காவல்துறை கர்நாடக காவல்துறையுடன் தீவிர ஆலோசனை புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது..!
நித்தியானந்தா இவர் பெயரைக் கேட்டால் ஒரு காலத்தில் கையெடுத்து கும்பிடாத ஆட்கள் இல்லை அந்த அளவிற்கு இவர் ஆன்மீகத்தில் மிகப் பிரபலமாக இந்தியாவில் இருந்தார்.
அதுவும் குறிப்பாக பெங்களூர்,தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம், உள்ளிட்ட இடங்களில் இவருக்கு ஏகப்பட்ட பக்தர்கள் இவர் இந்திய முழுவதும் தனது ஆசிரமக் கிளைகளை திறந்தார்.
பல்வேறு நல்ல விஷயங்களையும் நாட்டுக்கு செய்கிறேன் என்று அறிவித்தார் மரங்கள் நடுவது,ஏழை எளிய குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது போன்றவை செய்கிறேன் என்று அறிவித்தார்.
ஆனால் திடீரென்று ஒரு நாள் பிரபல தொலைக்காட்சியில் வெளியான அவருடைய ஆபாச படம் அவருடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றி விட்டது.
அதன்பிறகு இமாச்சல பிரதேசத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வழக்குகள் நடைபெற்று அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
அப்போது அவருடைய கடவுச்சீட்டு அதாவது (பாஸ்போர்ட்) முடக்கப்பட்டது,இதன் பிறகும் நித்தியானந்தா தொடர்ந்து ஆன்மீக சேவைகளை செய்து வந்தார்.
அதன்பிறகு திடீரென்று சில நாட்கள் காணாமல் போய்விட்டார், அப்பொழுது நான் இந்தியாவில் இருந்து தப்பித்து விட்டேன் புதிய நாட்டை உருவாக்கி விட்டேன்.
அந்த நாட்டிற்கு கைலாச என்ற பெயர் அந்த நாட்டிற்கு கொடியையும் பணமும் விரைவில் வெளியிடுவேன் என்று அறிவித்தார்,அதன் போலவே செய்தார்.
தமிழ்நாட்டில் இருந்து வருபவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்,ஆஸ்திரேலிய வந்து அங்கு இருந்து கருடா என்ற விமான சேவை மூலம் தன்னுடைய புதிய நாட்டிற்கு வரலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதற்கு புதிய இணையதளமும் தொடங்கினார் அதற்கு லட்சக்கணக்கில் இளைஞர்களும் முன்பதிவு செய்தார்கள் ஆனால் அதன்பிறகு அமைதியாக இருந்தார்.
மறுபடியும் நித்யானந்தா தனக்கு உடல் நலம் சரியில்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டு மிகவும் பிரபலமடைந்தார்,அதன் பிறகு நித்தியானந்தா என்ன ஆனார் என்பதை கேள்விக்குறியாகவே இருந்தது.
தற்போது நித்தியானந்தா மறுபடியும் இணையதளத்தில் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார்,இதனால் நித்தியானந்தா மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கிவிட்டார்.
இவரைப் பற்றி சர்வதேச காவல்துறையும் தீவிரமாக விசாரித்து வருகிறது,இவரைப் பற்றிய விவரங்களையும் அவ்வப்போது கர்நாடக காவல்துறையிடம் கேட்டு வருகிறது.
தற்போது இவரை கைது செய்வதற்கும் இவருடன் இருக்கும் பக்தர்களையும் கூண்டோடு இந்தியா அழைத்து வர தீவிரமான முயற்சியை கர்நாடக காவல்துறை எடுத்து வருகிறது.
அதாவது இவரைப் பற்றிய பல்வேறு விதமான தகவல்களையும் சர்வதேச காவல்துறைக்கு அனுப்பி உள்ளது.
இப்போது புதிய திட்டத்தையும் வகுத்துள்ளார்கள்,கூடிய விரைவில் இவரை இந்தியாவில் கொண்டுவர வேண்டுமென கர்நாடகா காவல்துறை தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இந்தியாவில் சிறந்த 10 சேமிப்பு திட்டங்கள் 2023
Nokia 7610 Mini 5G 2023 Specifications Price