
PM Narendra Modi launches the Vishwakarma scheme
நாளை விஸ்வகர்மா திட்டம் தொடக்கம் இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்கள்.
விஸ்வகர்மா ஜெயந்தி ஒட்டி பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை தொடங்கி தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நன்மைகள் அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பிரதமர் அலுவலகம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின உரையில் விஸ்வகர்மா ஜெயந்தி அன்று பாரம்பரிய திறன்களுடன் கருவிகளுடனும் கைகளுடன் வேலை செய்யும் மக்களுக்கு.
பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சுமார் 13,000 கோடி வழங்க உள்ளோம் என்று அறிவித்தார்.
Vishwakarma என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது,இந்த திட்டத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது.
2023 முதல் 2028 வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால் அந்த கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும் முதல் தவணையாக ஒரு லட்சம் வரை வட்டி இல்லா கடன் அவர்களுக்கு வழங்கப்படும்,பிறகு இரண்டாவது தவணையாக 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்பட உள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் தச்சாளர்,காலனி தைப்பவர், காலனி செய்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தம் தொழிலாளர், பூமாலைகள், சலவைத் தொழிலாளர், டைலர்,உட்பட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன்பெறலாம்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடிப்படை பயிற்சிகள் மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படும் என்று.
இந்த பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும்,பயிற்சி பெற்ற பின்னர் தொழிலில் கருவிகளை வாங்க 15,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி நாளை கொண்டாடும் நிலையில் நாளை பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்க வைக்க உள்ளார்.
இது குறித்த பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக சில தகவல்களை வெளியிட்டுள்ளது பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.
பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் இ சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முன்பதிவு செய்யலாம்.
விண்ணப்பித்தவர்களுக்கு பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ் அடையாள அட்டை ஆகிய வழங்கப்படும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to check passport status in tamil