
Price of wheat continues to rise in india
இதற்கு ஒரு முடிவே கிடையாது போல் தெரிகிறது தக்காளி, அரிசி, தொடர்ந்து கோதுமை விளையும் வரலாறு காணாத அளவில் உயர்வு..!
இந்தியாவில் மே மாதம் வரையில் உணவு பணவீக்கம் குறைந்தது ஒரே காரணத்திற்காக சில்லறையில் பணவீக்கம் பெரிய அளவில் சரிவு தடுக்கப்பட்டது.
ஆனால் பருவமழையில் ஏற்பட்ட மாற்றம்,இந்திய விவசாய உற்பத்தியை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக தக்காளி உட்பட பல காய்கறிகளின் விலை என்பது தாறுமாறாக உயர்கிறது,தொடர்ந்து அரிசி விலை மெல்ல மெல்ல உயர்ந்து உற்பத்தியும் குறைந்தது.
அரிசி விலை உயர்வை தடுக்க மத்திய அரசு வெளிநாட்டு ஏற்றுமதிக்கு முழுவதும் தடை விதித்தது,இதைவிட மோசமான நிலை தற்போது கோதுமைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கோதுமையின் விலை கடந்த 6 மாதங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகப்படியான தேவை காரணமாக சப்ளை செயின்-டிமாண்ட் பிரச்சனை உருவாகி,கோதுமை விலை தற்போது பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
அரிசியை அடுத்து கோதுமை இந்திய மக்களின் அடிப்படை உணவாக இருக்கும் வேலையில்,இதன் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.
விலைவாசி உயர்வு ஏற்கனவே உயர்ந்த பணம் வீக்கத்தை மேலும் பாதிக்கும் ஆர்பிஐ தலையிட முக்கியமாக தேவையாக உள்ளது.
தெலுங்கானா, சதிஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற முக்கியமான மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பண விக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அதிகப்படியான கவனத்தை செலுத்துகிறது.
நாட்டின் முக்கிய தேவை கோதுமை உற்பத்தி மாநிலங்களில் விவசாயிகளின் கோதுமை விநியோகம் கிட்டத்தட்ட முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாவு அரைக்கும் ஆலைகளில், சந்தைகளில், போதுமான கோதுமை பெற முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள் என டெல்லி வர்த்தகம் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஒரு மெட்ரிக் டன் கோதுமை 25,446 ரூபாயாக உயர்ந்துள்ளது,இது பிப்ரவரி 10ஆம் தேதி பின் பதிவான அதிகபட்ச விலை உயர்வு, மேலும் கடந்த 4 மாதங்களின் கோதுமை விலை கிட்டத்தட்ட 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் அடுத்த சில மாதங்கள் இந்தியாவில் முக்கியமான பண்டிகை காலம் என்பதால் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய உணவு தானிய கட்டுப்பாடுகளை தவிர்க்க.
அரசு தனது கிடங்களில் உள்ள கோதுமை இருப்பை அதிக அளவில் வெளியிட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படும்.
நாடு முழுவதும் கோதுமை தட்டுப்பாடு கட்டாயம் ஏற்படும்
ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி மத்திய அரசின் கிடங்குகளில் 28.3 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமை கையிருப்பு உள்ளது.
இது கடந்த வருடம் 26.6 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் இருந்து அதிகமாக இருந்தாலும்,புதிய சந்தை வாரத்துக்கு குறைந்தால் கட்டாயம் கோதுமை தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்படும்.
இந்த நிலையில் மத்திய அரசு கோதுமை விலைகளை குறைப்பதற்கும்,இறக்குமதி அவசியம்.
இறக்குமதி இல்லாமல் கோதுமை விநியோகத்தை நாடு முழுவதும் சிறக்க முடியாது.
கடந்த வாரம் உணவுத்துறை செயலாளர் கோதுமை மீதான 40 சதவீத இறக்குமதி வரியை குறைக்க அல்லது ரத்து செய்யும் திட்டத்தை அரசாங்கம் பரிசளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Post office recurring deposit scheme details 2023
How to increase life of food products in tamil