
Punjai Nilam Endral Enna in tamil 2023
புஞ்சை நிலம் என்றால் என்ன..! அது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது.
புஞ்சை நிலம் என்பது இரண்டு நீர் ஆதாரங்களை கொண்ட நிலம் ஆகும், புஞ்சை என்பது எத்தகைய நிலப்பகுதி என்றால் குறைந்த அளவில் நீரினை கொண்டுள்ள நிலம் என்று அழைக்கப்படும்.
இதில் நீர் ஆதாரங்கள் எதுவும் செய்ய முடியாது மற்றும் மேட்டு நிலைத்திணை இது சார்ந்து உள்ளது எனலாம்.
இதில் சிறுதானியங்கள் மட்டுமே விதை விதைத்து அறுவடை செய்ய முடியும்.
பெரிய பெரிய விதைகளாக இருக்கும் மஞ்சள், கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் வாழை மரம் இதில் விலை வைக்க முடியாது.
இந்தப் பெரிய விதைகள் காய்கறிகள் எல்லாம் நஞ்சை நிலத்தில் தான் விளைவிக்க முடியும்.
ஏனென்றால் நஞ்சை நிலங்களை எப்பொழுதும் மிகச்சிறந்த நீர் ஆதார நிலங்களாக கருதுகிறார்கள், அங்கு எந்தவித தானியங்களும் விளைவிக்க முடியும்.
கிணற்றடி நீர் மற்றும் வானத்தில் இருந்து வருகின்ற மழை இவ்விரண்டும் தான் புன்செய் நிலத்திற்கு நீர் ஆதாரங்களாக இருக்கிறது.
மற்றபடி வேறு எந்த வித நீர் ஆதாரங்களும் புஞ்சை நிலத்தில் இல்லை.
புஞ்சை நிலத்தில் வீடு கட்ட முடியுமா
கண்டிப்பாக கட்ட முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது,புஞ்சை நிலங்கள் விவசாயம் சார்ந்த விஷயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை.
மாறாக அந்த இடத்தில் மனைகளை வாங்கி வீடு கட்ட முடியும் சுமார் 100 லட்சம் ஏக்கருக்கு மேலான புன்செய் நிலங்களும் சுமார் 41 லட்சம் ஏக்கர் நிலங்களும் தமிழகத்தில் காணப்படுகிறது.
இதனால் அரசு நஞ்சை நிலங்களை காப்பாற்ற வேண்டும் என்று நோக்கத்தில் நஞ்சை நிலங்களில் வீடு கட்டுவதை தவிர்த்து வருகிறது.
பெரும்பாலான மக்கள் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் புஞ்சை நிலங்களை அதிகமாக வாங்குகிறார்கள், நஞ்சை நிலங்களை முன்பு போல் யாரும் இப்பொழுது வாங்குவதற்கு விரும்புவதில்லை.
புஞ்சை நிலங்களில் நீராதாரங்கள் குறைவாக இருப்பதால் வீடு கட்டுவதற்கு, தொழிற்சாலைகள் கட்டுவதற்கு, கட்டுமானங்கள், போன்ற விஷயங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நஞ்சை நிலங்கள் நீர் ஆதாரங்களாக இருப்பதால் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பெரிதும் இந்த நிலங்கள் உதவுகிறது, இது மட்டுமில்லாமல் நஞ்சை நிலங்கள் இருக்கும் இடத்தில் நீர்வளங்கள் அதிகமாக இருக்கிறது.
ஒரு நிலத்தை நீங்கள் வேண்டுமென்று முடிவு செய்தால் முதலில் அது புன்செய்நிலமா,நன்செய் நிலமா,மானாவரி நிலமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் விவசாயத்தை காப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விதமான திட்டங்களை வகுத்து வருகிறது இப்பொழுது நன்செய் மானாவரி போன்ற நிலங்களில் வீடு கட்டுவதற்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கு.
சாலைகள் போடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது,முக்கியமாக நஞ்சை நிலத்தில் தொழிற்சாலைகள்,வீடு கட்டுவதற்கு, வணிக வளாகங்கள் கட்டுவதற்கு, பேருந்து நிலையம் அமைப்பதற்கு.
அரசாங்கம் சார்ந்த எந்த ஒரு திட்டத்திற்கும் தடை விதித்துள்ளது ஏனென்றால் நன்செய் நிலம் என்பது விவசாயம் சார்ந்த நீளமாகும். விவசாயம் என்பது நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பதால் விவசாயம் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என அரசாங்கம் கருதுகிறது.
நிலம் வாங்குவதற்கு முன்பு அந்த நிலம் நன்செய் நிலமா,புன்செய் நிலமா,என்பதை அரசாங்கம் வைத்திருக்கும் தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் அந்த நிலத்தைப் பற்றி வில்லங்கச் சான்று அல்லது பத்திரப்பதிவு அலுவலகத்தில் தகவல்களை திரட்டி கொள்ளலாம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்