
Puzhal Jail for Minister Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையா அல்லது டெல்லி சிறையா என்பது உறுதி செய்யப்பட்டது..!
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால்.
அவரை அடுத்த கட்டமாக புழல் சிறையில் அடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று நெருங்கிய திமுக அமைச்சர்கள் தெரிவிக்கிறார்கள்.
2011 – 2015 ஆம் ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு வாங்கி கொடுப்பதாக சுமார் ஏராளமான நபர்களிடம் மிகப்பெரிய தொகையை பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை உடனடியாக விசாரித்து 2 மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஒரு கடுமையான கண்டனத்துடன் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமலாக்கத்துறை சரியாக இருக்கும் என உச்சநீதிமன்றமும் பரிந்துரை செய்துள்ளது ஏனென்றால் இந்த வழக்கில் பண மோசடி நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பதற்கு அமலாக்கத்துறை துணை ராணுவப்படையுடன் நேற்று செந்தில் பாலாஜி வீடு தலைமைச் செயலாக அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
அங்கு முக்கியமான கோப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜியிடம் விசாரணை தொடர்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
இதன் காரணமாக செந்தில் பாலாஜியை இரவு கைது செய்வதற்கு அமலாக்கத்துறை சென்றது.
அப்போது அவர் நெஞ்சு வலி காரணமாக மயங்கி விழுந்தால், உடனடியாக அரசு ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கு திமுக கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
கைது நடவடிக்கை சரியானது
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிக விமர்சனத்திற்கு உள்ளாகிறார்.
காரணம் தமிழ்நாடு அரசு மதுபான கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி பல நபர்களிடம் வேலை வாங்கிக் கொடுப்பதாக மிகப்பெரிய தொகை பெற்றுள்ளார் என குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தங்களுடைய கடமைகளை செய்கிறது.
ஆனால் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு நாடகத்தை நடத்தி வருகிறது.
சட்டம் அனைவருக்கும் சமம்
நம் நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் அவர் அதிகாரத்தில் இருந்தாலும் சரி அதிகாரத்தில் இல்லாமல் இருந்தாலும் சரி தவறு செய்தால் தவறுதான்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட உண்மை.
அப்பொழுது திமுக தலைவர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் இந்த வழக்கை பற்றி பலமுறை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
ஆனால் இப்பொழுது திருமு க ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன்.
திமுகவின் தோழமைக் கட்சிகள் உடனடியாக மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது காரணம் திமுக கொடுக்கும் பணத்திற்கு சரியாக வேலை செய்ய வேண்டும்.
சினிமாவில் அரசியல்வாதிகள் கைது செய்யப்படும் போது நெஞ்சுவலி என்று மருத்துவமனைக்கு சென்று அங்கு அவர்கள் சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள் தற்போது செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது.
நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்..!
பான் கார்டில் முகவரியை மாற்றுவது எப்படி
பான் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா
வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்வது
தாமதமாக தூங்கும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு