
RBI offline digital payment method full details
இணையதள வசதி இல்லாமல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் புதிய முறையை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது..!
இந்தியாவில் இணையதளம் மூலம் பணம் பரிமாற்றம் என்பது மிகப்பெரிய ஒரு மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மத்திய அரசுக்கு பல வழிகளில் இந்த இணையதள பணப்பரிமாற்ற சேவை பலன் அளித்துள்ளது.
இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இந்த இணையதள பணப்பரிமாற்ற சேவைகள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக இப்பொழுது இருக்கிறது.
ஆனால் கிராமப்புறங்களில் இதன் பயன்பாடு இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக.
இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட் அல்லது இணையதள பணப்பரிமாற்றம்
இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் அல்லது இணையதள முறையில் பண பரிமாற்றம் டிஜிட்டல் துறையில் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
என்பதில் தீவிரமாக இருக்கும் ரிசர்வ் வங்கிக்கு எந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியையும் பெருமையும் கொடுத்துள்ளது அதைவிட.
மிகப்பெரிய தாக்கத்தை இன்னும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும்.
இணையதள வசதி இல்லாமல் பணம் பரிமாற்றம் சேவை மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையதள வசதி இல்லாமல்
அதாவது இணையதள இணைப்பு இல்லாமல் பணத்தை டிஜிட்டல் முறையில் பணத்தை அனுப்புவது அல்லது பேமெண்ட் செய்யும் சேவைக்காக புதிய திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஆப்லைன் பேமெண்ட் வழியில் ஒரு முறை குறைந்தபட்சம் 200 ரூபாயும் அதிகபட்சம் ரூபாய் 2,000 வரையில் பணத்தை செலுத்த முடியும்.
எந்த இணைப்பும் தேவையில்லை
இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு எந்தவிதமான இணையதளம் மற்றும் டெலிகாம் இணைப்புகளும் தேவையில்லை.
இதேபோல் இந்த பேமென்ட் சேவையை கார்டு அல்லது மொபைல் கருவி மூலம் (Face to Face Proximity Mode) செய்து கொள்ள முடியும்.
SMS குறுஞ்செய்தி காலதாமதமாகும்
இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு (Additional Factor of Authentication) தேவையில்லை அதாவது ஒடிபி போன்ற எதுவும் தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆப்லைன் பேமெண்ட் என்பதால் பணம் செலுத்திவிட்டுதற்கான SMS குறுஞ்செய்தி கால தாமதத்துடன் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஆப்லைன் பேமென்ட் சேவையை (Small Value Digital Payments) என்ற வேலெட் செய்ய ரிசர்வ் வங்கி புதிய கட்டமைப்பை உருவாக்கி உள்ளது.
இந்த வேலெட்க்கு அதிகப்படியாக 2000 ரூபாய் மட்டுமே வைப்பு வைக்க முடியும் அதன் பின்பு மீண்டும் பணத்தை சேவிங் செய்ய இணையதளம் வசதி வேண்டும்.
(Small Value Digital Payments) முறையில் ஒரு பேமெண்ட் க்கு அதிகப்படியாக ஒரு முறை 200 ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் அதற்கு மேல் செலுத்த முடியாது.
இந்த திட்டத்தை சோதனை முறையாக கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் பயன்படுத்தப்பட்ட.
முகப்பருவை எளிமையாக நீக்கும் வேப்பிலை சோப்பு.
பல்வேறு மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்யப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது.
கிராமம் மற்றும் டவுன் பகுதி டார்கெட்
இத்தகைய ஆப்லைன் பேமெண்ட் முறை இணையதள வசதி இல்லாத டெலிகாம் சேவை தரம் குறைவாக உள்ள அனைத்து இந்திய கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் இருக்கும் மக்கள் மத்தியில்.
Signs might indicate your liver disease in tamil
டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் புதிய புரட்சியை உருவாக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை தற்போது நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.