
Saral Yojana Pension plan Full Details in tamil
ஓய்வூதியதாரர்களுக்கு சிறந்த திட்டம் மத்திய அரசின் அதிரடி பிளான் இனி வயதானவர்கள் நிம்மதியாக இருக்கலாம்..!
ஓய்வூதியதாரர்களுக்கு மாதம்தோறும் குறைந்தபட்சம் 1000/- ரூபாய் பெரும் திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு இப்பொழுது பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது,பொதுமக்களின் நன்மைக்காக எத்தனையோ சிறந்த திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதற்காக பல்வேறு திட்டங்களையும் அமல்படுத்தி அவை மூலம் மக்கள் பயன்பெறவும் வழிவகை செய்து வருகிறது.
அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான (பிரதமர் வாயா வந்தன யோஜனா ஓய்வு திட்டத்தை பற்றி) நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்குப் பிறகு எல்ஐசி (LIC) எனப்படும் இந்தியாவில் காப்பீட்டு கழகம் மத்திய அரசின் மானியத்துடன் இணைக்கப்படாத மத்திய அரசு பங்கேற்காத நிலையில்.
பிரதமர் வாயா வந்தன யோஜனா (Vaya Vandana Yojana)திட்டத்தை அறிமுகப்படுத்தியது,இந்த திட்டத்திற்கு கடந்த 2023 மார்ச் 31 வரை நீட்டி காலக்கெடு நீட்டி இருந்தது.
இப்படி இன்னும் ஏராளமான ஓய்வூதிய திட்டங்கள் வயதான நபர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளதால் முதியோர்கள் மாதம் தோறும் நல்ல வருமானத்தை பெற முடியும்.
இதனால் இந்த திட்டங்கள் எல்லாம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது குறிப்பாக சாரல் யோஜனா பென்ஷன் திட்டத்திற்கு ஏகபோக வரவேற்பு இருக்கிறது.
இதற்குக் காரணம் பென்ஷன் என்றால் வேலைக்கு போகிறவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலைமை உள்ளது.
அதுவும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பென்ஷன் என்பதே சாத்தியமில்லாத ஒரு செயலாக நம் நாட்டில் கருதப்படுகிறது.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் சுயதொழில் செய்யும் நபர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்.
இந்த திட்டம் நம் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது கடந்த 2021 ஏப்ரல் 1 முதல் அறிமுகமான திட்டமாகும்.
சாரல் யோஜனா பென்சன் திட்டத்தில் (Saral Yojana Pension plan) குறைந்தபட்ச திட்ட தொகையாக மாதம் 1,000/- ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும்.
இந்த தொகையை மாதத் தவணைகளில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை செலுத்தி வரலாம்.
ஒருமுறை மட்டும் பிரிமியம் செலுத்தும் திட்டம் இதில் அடக்கம் குறைந்தபட்சம் 1,000/-என்றால் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் ஒருவர் செலுத்த முடியும்.
முதலீடு செலுத்தும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும் ஓய்வூதியம் கிடைப்பதால் நிம்மதியாகவும் இருக்கலாம் சாரல் யோஜனா பென்ஷன் திட்டம் பங்கு சந்தையில் முதலீடு செய்யாது என்பதால் ரிஸ்க் குறைவாக உள்ள சிறந்த திட்டமாகும்.
இந்த திட்டத்தில் இணையும்போது பாலிசிதாரர் ஒருமுறை மட்டுமே பிரிமியம் தொகையை செலுத்தினால் போதும் பிறகு ஒவ்வொரு மாதமும் மாதந்திர ஓய்வூதியமாக ரூபாய் 1,000/- முதல் பெற்றுக்கொள்ள முடியும்.
மாதாந்திர அடிப்படையில் காலாண்டு,அரையாண்டு மற்றும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை என விருப்பத்தின் பேரில் பென்சன் தொகையை பெற்றுக் கொள்ள முடிகிறது.
என்பதால் மூத்த குடிமக்களிடம் மிகுந்த வரவேற்பு இந்த திட்டம் பெற்று வருகிறது.
இந்த திட்டத்தில் எந்த வயதில் இணையலாம்
மத்திய அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது நாட்டில் மக்களிடத்தில் சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்.
பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆனால் போதும் அனைத்து திட்டங்களிலும் நீங்கள் இணைந்து கொள்ள முடியும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to protect pan card aadhar card 2023
How to get token for magalir urimai thogai..!