Uncategorized

Thagaval ariyum Urimai sattam full details

Thagaval ariyum Urimai sattam full details

Thagaval ariyum Urimai sattam full details

தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன இதை எப்படி தெரிந்து கொள்வது..!

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன அதை பற்றி சில தகவல்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கம் மற்றும் அரசின் உதவி பெற்றுக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களில் உள்ள தகவல்களை.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்வதற்கு தேவையான உரிமையை அளிப்பதுதான் இந்த தகவல் உரிமை சட்டமாகும்.

இந்த சட்டம் எதற்கு பயன்படுகிறது எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன

அக்டோபர் மாதம் 12ஆம் தேதி 2005 இல் இந்த சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது, 2002 வரை இது தகவல் சுதந்திரச் சட்டமாக இருந்தது.

இந்த சட்டம் ஜம்மு-காஷ்மீருக்கு இப்பொழுது நடைமுறையில் உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஒருவர் எந்த துறையின் மீது அதாவது அரசு இயற்றியுள்ள சட்டதிட்டங்கள் சந்தேகம் இருந்தால்.

அது எந்தத் துறையின் கீழ் வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த சட்டத்தில் விண்ணப்பிக்கலாம் அந்த துறை உங்களுக்கு 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும்.

பதிலளிக்க வேண்டிய கால அவகாசம்

தனி மனிதன் உயிர் அல்லது தனியுரிமை தகவல் மூலம் கேட்டால் அதற்கு அந்தத் துறை 48 மணி நேரத்திற்குள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும்.

உங்களுடைய கோரிக்கை துணை பொதுத்தகவல் அதிகாரியிடம் கேட்டால் அதற்கு அவர்கள் அதிகபட்சம் 35 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

மூன்றாவது மனிதன் தலையீட்டின் போது கேட்கப்படும் தகவல்களை 40 நாட்களுக்குள் கட்டாயம் தரவேண்டும்.

ஒரு நபரின் மீது இருக்கும் வழக்குகள் பற்றி தகவல்களை பட்டியலிடப்பட்ட அல்லது புலனாய்வு நிறுவனங்களிடம் இருந்து மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை எளிதாக பெறமுடியும் 45 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

என்ன மாதிரியான தகவல்களை உங்களால் பெற முடியும்

அரசாங்கம் அறிவித்துள்ள அறிவிப்புகள், பதிவுகள், பத்திரிக்கை அறிக்கைகள், அரசு ஆணை, ஆவணங்கள், அசையும் சொத்து, அசையா சொத்து, வாங்கிய விவரங்கள், மேலும் பல தகவல்களை பற்றி எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

இந்த விண்ணப்பம் பற்றிய முழு தகவல்கள்

மக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை எளிமையாக தெரிந்துகொள்ள பொதுத்தகவல் அதிகாரிக்கு விண்ணப்பத்தை 10 ரூபாய் கட்டணமாக செலுத்தி அனுப்பி வைக்கவேண்டும்.

தங்களுக்கு தேவையான தகவல்கள் ஒரு மாதம் ஆகியும் வரவில்லை எனில் மத்திய தகவல் ஆணையத்தை (CIC) விண்ணப்பதாரர்கள் அணுகலாம்.

இதற்கு தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் கட்டணமும் நிர்ணயிக்கப்படவில்லை.

உங்களுடைய பெயர் முகவரி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் போன்ற விவரங்களை சமர்ப்பித்தால் போதுமானது.

இணையதளம் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் அதற்கான இணையதள முகவரி.Rtionline.in

இந்த அமைப்புகளில் உங்களால் தகவல் பெற முடியாது

வெளிநாட்டு அரசாங்கத்தின் ரகசிய தகவல்கள்

நாட்டுடைய போர் திறன் மற்றும் பாதுகாப்பு பற்றிய தகவல்களை பெற முடியாது.

அறிவியல் மற்றும் பொருளாதார தகவல்களை தெரிந்துகொள்ள முடியாது.

8வது பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள 11  விவரங்களை கொடுக்காமல் ஒரு அலுவலர் மறுக்க முடியும்.

சட்டமன்றத்தில் சிறப்பு உரிமை மீறல் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள முடியாது.

இந்த சட்டத்தை நிர்வகிக்கும் அமைப்புகள் பற்றிய தகவல்கள்

குடியரசுத் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தகவல் ஆணையர்.

மத்திய பொது தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்.

தலைமை தகவல் ஆணையர் இவருடைய பதவிக்காலம் 5 வருடம் அமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு தலைமை தேர்தல் ஆணையருக்கு நிகரான அதிகாரம் உள்ளது.

ஆளுநர் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொது தகவல் அதிகாரி அலுவலகம் இவர்கள் எல்லோரும் இந்த சட்டத்தை நிர்வகிக்கும் அமைப்புகளாக இந்தியாவில் இருக்கிறார்கள்.

போக்சோ சட்டம் என்றால் என்ன

அதிகாரிகளை தேர்ந்தெடுப்பவர்கள் யார்

மத்திய அளவில் உள்ள தகவல் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பவர்கள் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சரவை மந்திரிகள்.

top 9 health benefits list in vasambu

மாநில அளவில் உள்ள தகவல் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கக் கூடிய நபர் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சரவை மந்திரிகள்.

What is your reaction?

Excited
2
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0