
Titanic submarine new signal sound detected
நீர் மூழ்கி கப்பலை 5 நாட்களாகத் தேடும் அமெரிக்கா,கனடா உள்ளே இருக்கும் மிகப்பெரிய செல்வந்தர்கள் யார்..!
அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த ஜூன் 18ஆம் தேதி தொலைந்து போன அமெரிக்கா நீர் மூழ்கி கப்பலை பற்றி தான் இப்போது எங்கும் பேச்சாக இருக்கிறது.
இந்த நீர் மூழ்கி கப்பல் தொலைந்து போய் 5 நாட்களில் முடிவடைந்து விட்ட நிலையில் நீர் மூழ்கிக் கப்பல் எவ்வாறு தொலைந்து போனது.
கப்பலில் மொத்தம் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் இதனை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் நாடுகள் எவை என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.
அமெரிக்காவை சேர்ந்த ஓசோன்கேட் என்ற நீர் மூழ்கி கப்பலை உருவாக்குவதில் நிறுவனத்தின் நிபுணத்துவம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது டைட்டானிக் நீர் மூழ்கி கப்பல்.
டைட்டானிக் என்று பெயர் வைத்ததாலே பிரச்சனைதான் இருக்கிறது கடந்த ஜூன் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் 5 பயணிகளுடன் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் தனது பயணத்தை தொடங்கியது.
ஆனால் பயணத்தை துவங்கி 1 மணி நேரம் 45 நிமிடங்களில் டைட்டானிக் நீர் மூழ்கி கப்பல் தொலைந்துவிட்டது என கப்பல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகளால் நீர் மூழ்கி கப்பலை அதன் சிக்னலை வைத்து அடையாளம் காண முடியவில்லை.
22 அடி நீளத்தில் கார்பன்ஃபைபர் மற்றும் டைட்டானியத்தால் உருவாக்கப்பட்ட டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் தொலைந்து போன செய்தி விரைவாகவே அமெரிக்கா கடற்படைக்கு தெரிந்தது.
வழக்கமான கப்பல் தொலைந்து போனது போல் நீர்மூழ்கிக் கப்பல் தொலைந்து போனதை எடுத்துக் கொள்ள முடியாது.
சாதாரண கப்பல் தொலைந்து போனால் சில நாட்களுக்கு சில மாதங்களுக்கு பிறகு கூட பயணிகளுடன் பத்திரமாக மீட்டு விடலாம்.
ஆனால் நீர் மூழ்கிக் கப்பலில் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால்,அவற்றுள் பயணிகள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலமாகவே உயிர் வாழ முடியும் என்பதாகும்.
தற்போது தொலைந்து போன டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் 5 பயணிகளுக்கு அதிகபட்சமாக 96 மணி நேரத்திற்கு மட்டுமே சுவாசிக்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது.
அதாவது இன்று ஜூன் 22ஆம் தேதி காலை உடன் அந்த 96 மணி நேரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் 96 மணி நேரங்கள் என்பது ஆக்ஸிஜனை பயன்படுத்துவதை பொருத்து.
அதிகபட்சமாக கிடைக்கக்கூடியது எனவும் தொலைந்து போன நீர் மூழ்கிக் கப்பலில் 96 மணி நேரத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே ஆக்சிஜன் தீர்ந்து போய் இருக்கலாம் என அதிகாரிகள் மிகப்பெரிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவிக்கிறார்கள்.
நீர்மூழ்கி கப்பலால் கடலுக்குள் வேறு எந்த வழியிலும் ஆக்சிஜனை பெற முடியாது,இதனால் இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுப் படைகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அது மட்டுமின்றி கப்பலில் பயணித்ததாக கூறப்படும் 5 பயணிகள் மிகுந்த செல்வந்தர்கள்.
இவர்கள் ஓசன்கேட் நிறுவனத்தின்,நிறுவனரும் முதன்மை நிர்வாக இயக்குனரும் இதில் அடங்கியுள்ளது என்பது மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி..!
நீர்மூழ்கி கப்பல் தொலைந்து போன இடத்தில் இருந்து ஜூன் 18 மட்டும் 19ஆம் தேதிகளில் சத்தம் எழுந்தது இருப்பினும் அதிகாரிகளால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை.
அதேபோன்ற சத்தம் மீண்டும் ஜூன் 22ஆம் தேதி அதிகாலை கேட்டதாக கூறப்படுகிறது.
வடக்கு அட்லாண்டிக் கடல்
பணிப்பாறைகள் அதிக அளவில் இருக்கும் இதனால் இந்த மீட்பு பணியில் கனடா நாட்டின் போர்க்கப்பல் பயன்படுத்தப்படுகிறது.
5 நாட்களாக கிடைக்காத நீர்மூழ்கி கப்பலில் இருந்து சத்தம் கேட்டிருப்பது நல்ல விஷயம் தான்.
ஆனால் இந்த சத்தம் ஆக்சிஜன் தீர்ந்து போவதற்கு இருக்கலாம் என மீட்டுப் பணியில் ஈடுபட்டோர் கவலை தெரிவித்துள்ளார்கள்.
Leo first look poster Poster Released online
Voter ID உடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..!
How to change minor PAN card to Major PAN card
How to apply new voter id online in tamil
New privacy feature in WhatsApp 2023