
TN govt school teachers announce protest
விடியாத விடியலை நோக்கி அரசு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு 1 லட்சம் நபர்கள் பங்கேற்கிறார்கள்..!
துரோகங்கள் ஒருபோதும் வெல்வது இல்லை, தர்மமே வெல்லும் இதனை உணர்ந்த அரசு ஊழியர்கள்.
மாதம் கை நிறைய சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் இப்பொழுது விடியல் அரசை நோக்கி போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.
அரசு ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் போது சாதாரண மக்களின் நிலை என்ன தெரிந்து கொள்ளுங்கள்.
திரு மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த ஆண்டு வெற்றி பெற்றார், இவர் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பதற்கு முன்னராகவே கட்டுமான பொருட்களின் விலை என்பது வரலாறு காணாத அளவில் உயர்ந்து விட்டது.
குறிப்பாக 250 ரூபாயில் இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை இப்பொழுது 500 ரூபாய்க்கு மேல், கட்டுமான பொருட்களின் விலை என்பது விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து விட்டது.
இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்கள், திமுக அரசின் மீது,அதுமட்டுமில்லாமல் அனைத்து பொருட்களின் விலை என்பது சராமரியாக உயர்ந்துவிட்டது.
தேர்தல் வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றவில்லை, சரியாக அரசு இப்பொழுது செயல்படவில்லை, தமிழகத்தில் என்ன நடக்கிறது என்ற ஒரு கேள்வியும் உருவாகிவிட்டது.
பேருந்துகள் தனியார்மயமாக்குதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் தேவையில்லாத பல்வேறு வகையான திட்டங்களை அறிவிக்கிறார்.
அந்த திட்டங்கள் எதுவுமே மக்களுக்கு பயன் கொடுப்பதில்லை கடலில் பேன வைப்பது, போன்ற திட்டங்கள். அனைத்து தரப்பு மக்களும் இப்பொழுது அதிருப்தியில் உள்ளார்கள் இந்த விடியாத விடியலை நோக்கி.
அரசு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு
திரு மு க ஸ்டாலின் அவர்கள் இப்பொழுது தமிழகத்தில் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் என யாரையும் கண்டு கொள்வது இல்லை.
ஆட்சியை எதை நோக்கி செல்கிறது என்ற ஒரு கேள்வியும் மக்களிடத்தில் இருக்கிறது.
திமுக வெற்றி பெறுவதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் அதனை சார்ந்த நபர்கள் மறைமுகமாக நேரடியாக அனைத்து வகையான வேலைகளையும் செய்தார்கள்.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக செயல்பட்டார்கள், உரிய நேரத்தில் ஓட்டு பெற்று திமுக அரசை வெற்றி பெற வைத்தார்கள் ஆனால் அதன் பிறகு நிலைமை முற்றிலும் மாறியது.
அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களில் பணியிடத்தை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது.
அகவிலைப்படி உயர்வு
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது.
1 லட்சம் ஊதியம் பெறுவோருக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார்.
கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆகியோர் போல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுக்க முடியாத சூழ்நிலையில் விடியல் அரசு இருக்கிறது என தெரிவித்தார்கள்.
போராட்டம் அறிவிப்பு
இதனைக் கண்டித்து தொடக்கப்பள்ளிகளில் ஒன்று, இரண்டு, மூன்றாம், வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் எடுக்கும் நிலை தமிழகத்தில்.
சுமார் 14 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி அரசு ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
Cholesterol control food list in tamil
ஆசிரியர் கூட்டணி சார்பாக வரும் 4ஆம் தேதி மாலை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்.
ஒரு லட்சம் ஆசிரியர்கள்
சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்கள் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.
இதனை தொடர்ந்து 5 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள்.
கர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..!
அதன்பிறகு முதலமைச்சர் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.