
tn rs 1000 scheme 63 lakhs applicants rejected
ரூபாய் 1,000/- உரிமைத் தொகை 63 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பா?வடிகட்டும் தமிழக அரசு எப்பொழுது முழு பட்டியல் வெளியிடப்படும்..!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைக்காக 1.63 லட்சம் விண்ணப்பங்கள் இருக்கும் நிலையில்,இதில் மூன்றில் ஒரு பகுதி அதிகமானோரை வடிகட்டும் தமிழக அரசு திட்டம் இருக்கிறது.
அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்ப பெண்மணிகளுக்கு மாதம்தோறும் 1,000/- ரூபாய் வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில்.
தமிழக முதலமைச்சர் அவர்கள் மிகப்பெரிய விழாவாக இதனை தொடங்கி வைக்க இருக்கிறார்,கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு இந்த உரிமை தொகையை பெற தகுதி உடைய பெண்கள் யார்.
தகுதியற்ற பெண்கள் யார் என அறிவித்து,இதற்கு விண்ணப்பிக்கும் முகாம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
அதன்மூலம் 80 லட்சத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 14 ஆயிரத்திற்கு அதிகமான இடங்களில் 2ம் கட்ட முகம் நடைபெற்றது,கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 2ம் கட்ட முகம் முழுவதும் நிறைவடைந்தது.
2ம் கட்ட முகாமில் விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில்,தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தியது.
இந்த மூன்று முகாம்களில் மூலம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது,ஆனால் குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள்.
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
ஒரு ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கு அதிகமான மின்சார பயன்படுத்தும் குடும்பங்களின் தலைவிகளுக்கு, ரூபாய் 1,000/- உரிமைத் தொகை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சொந்த பயன்பாட்டிற்கு நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்.
மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், ஊராட்சி வார்டு, கவுன்சிலர்கள், தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள், உரிமை தொகை கோர முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய ஓய்வூதியம், போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வையும் பெரும் குடும்பங்களுக்கு.
உரிமை தொகை முடியாது என்ற அரசு அறிவித்துள்ளது, விண்ணப்பங்களில் சரியான தகவல் வழங்கப்பட்டுள்ளதா,என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஒரு கோடி பேருக்கு உரிமை தொகை என அரசு முடிவு செய்த நிலையில் கூடுதலாக இருக்கும் 63 லட்சம் விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கு.
வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு தகுதியற்ற விண்ணப்பதாரர்களை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி அதன்படி முதற்கட்ட பட்டியலும் அதன் தொடர்ச்சியாக இறுதிக்கட்ட பட்டியலும் தயார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக நிலவை அடைந்தது
லிட்டருக்கு 40 கிலோமீட்டர் மைலேஜ் தரும் மாருதியின் புதிய கார்..!