
Top 10 High Investment plans for 2023 in tamil
லட்சக்கணக்கில் வருமானம் கொடுக்ககூடிய சிறந்த 10 துறைகள் 2023 ஆம் ஆண்டில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
2023 ஆம் ஆண்டில் சிறந்த திட்டங்களில் முதலீடு செய்து அதிக அளவில் லாபத்தை சம்பாதிக்க வேண்டுமென நீங்கள் திட்டமிட்டால் இந்த கட்டுரை கண்டிப்பாக உங்களுக்கு பயன் கொடுக்கும்.
ஏனென்றால் எதிர்காலத்தில் என்ன மாதிரியான துறைகள் ஆதிக்கம் செலுத்தும் அந்த துறைகள் மூலம் அதிகமான வருமானம் பெற முடியும் என்பது நிச்சயமில்லாத தன்னை.
ஆனால் சில துறைகள் எப்போதுமே அதிக வருமானம் கொடுக்ககூடிய துறைகளாக இருக்கிறது.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலகிலுள்ள வல்லரசு நாடுகள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அனைத்து நாடுகளுமே பொருளாதாரத்தில் சிக்கிக்கொண்டது.
சில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே தற்சார்பு பொருளாதாரத்தை நம்பி இருப்பதால் எப்போதும் பொருளாதார சிக்கலில் இல்லாமல் இருந்து வருகிறது.
ஆனால் எந்த ஒரு கால நேர சூழ்நிலையிலும் சில துறைகள் எப்பொழுதும் அதிகப்படியான வருமானத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட துறைகளை பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து கொண்டால் கட்டாயம் நீங்கள் எப்போதும் அதிக வருமானம் சம்பாதிக்க கூடிய நபராக இருப்பீர்கள்.
அறிவுசார் திட்டம் (Intellectual Project)
சில மனிதர்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் எப்பொழுதும் அதிகமான வருமானத்தை பெறுவதற்கு முக்கிய காரணம் அறிவுசார் துறை.
இந்த அறிவுசார் துறையில் அதிக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து.
புதிய ஆற்றல், புதிய தேடல், புதிய அறிவு, புதிய கண்டுபிடிப்பு, என ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள்.
இதன் மூலம் அந்த நிறுவனம் எப்பொழுதும் அதிகப்படியான வருமானத்தையும் பெறுகிறது.
நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும் அதிக வருமானத்தை பெற கூடிய நபராக இருக்க வேண்டும் என்றால்.
முதலில் நீங்கள் அறிவுசார் துறையில் உங்களுடைய நேரத்தையும் உங்களுடைய பணத்தை முதலீடு செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
மென்பொருள்கள் (softwares)
Photoshop, Microsoft Excel, Microsoft Word, Microsoft PowerPoint, video editing, graphics design, Tally.
போன்ற மென்பொருள்களை பற்றி அடிப்படை புரிதல் மற்றும் அடிப்படை தகவல்கள் கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இந்த மென்பொருள்களில் நீங்கள் கட்டாயம் வேலை செய்ய வேண்டும்.
இந்த மென்பொருள்களை முழுவதும் கற்றுக் கொள்ளுங்கள் ஏனென்றால் இந்த மென்பொருட்கள் மூலம் நீங்கள் வீட்டில் இருந்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஹோட்டல்கள் (Hotels)
20 ஆண்டுகளுக்கு முன்பே வாரம் ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் நம்ம ஊரில் தொடங்கி விட்டது.
இப்பொழுது சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப், யூடியூப்,( Social networking sites, WhatsApp, YouTube,) போன்றவற்றின் மூலம்.
புதிய வகை உணவுகள் விளம்பரப்படுத்தப்படுகிறது, இதன்மூலம் ஹோட்டல்களின் வருமானம் என்பது இப்போது அதிகமாகி விட்டது.
சினிமாத்துறை (Cinema industry)
உலகில் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படும் ஒரு துறை என்றால் அது சினிமா துறை தான்.
கோடிக்கணக்கில் வருமானம் கொடுக்ககூடிய இந்த துறை உலகம் முழுவதும் பரந்து விரிந்து உள்ளது.
இந்தத் துறை உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், கதையாசிரியர், ஸ்டன்ட் மாஸ்டர்,ஒளிப்பதிவாளர்,பாடகர் என பல வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் கொட்டிக் கிடக்கிறது.
இந்த துறையில் நுழைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
உங்களுடைய தன்னம்பிக்கை விடா முயற்சி காரணமாக இந்தத் துறையில் நீங்கள் நுழைந்துவிட்டால் குறைந்தது 5 ஆண்டுகள்.
இந்தத் துறையில் நீங்கள் நீடித்து இருந்தால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உங்களுக்கு செல்வவளம் இந்த துறை மூலம் பெருகிவிடும்.
ஏற்றுமதி (Export)
ஏற்றுமதித் துறை அதிக வருமானம் கொடுக்ககூடிய துறைதான் குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு.
மீன், காய்கறி, பழம் பால், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், வாசனை திரவியங்கள், போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சீனா, சோவியத் யூனியன் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது.
காரணம் அங்கு அதிக குளிர் காரணமாக தானிய உற்பத்தி எப்பொழுதும் அங்கு குறைவு.
ஒவ்வொரு ஆண்டும் சீனா மில்லியன் கணக்கான டன் மக்காச்சோளத்தை அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது.
அரிசி, சர்க்கரை, கோதுமை, போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு உலகம் முழுவதிலும் எப்பொழுதும் டிமாண்ட் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.
சில நேரங்களில் நம் நாடு அரிசி, கோதுமை, சர்க்கரை, போன்றவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்கிறது.
காரணம் அந்த அளவிற்கு உணவு பற்றாக்குறை சில நேரங்களில் ஏற்படுகிறது.
இந்த தொழிலை செய்வது சற்று கடினமான விஷயம் என்றாலும், இதன் மூலம் உங்களுக்கு அளவுகடந்த வருமானம் கிடைப்பது உண்மையான ஒரு விஷயம்.
கணினி அறிவு (computer knowledge)
அனைத்து இடங்களிலும் கணினிகளின் பயன்பாடு மிக அதிக அளவில் தேவைப்படுகிறது.
Microsoft, Intel, AMD, Apple போன்ற நிறுவனங்கள் இப்போது இருக்கும் கணினிகளின் மீது அதிக அளவில் முதலீடு செய்து.
சூப்பர் கணினிகள் குவாண்டம் கணினிகள் (super computers and quantum computers) உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டு விட்டார்கள்.
இந்த அதிநவீன (super computers and quantum computers) இனிவரும் காலங்களில் கட்டாயம் இந்த உலகில் அனைத்து இடங்களிலும் வரும்.
அப்போது இப்பொழுது இருக்கும் கணினிகளை விட அந்த கணினிகள் பல மடங்கு அதிவேகமாக இயங்கக் கூடியதாக இருக்கும்.
இதனால் உலகில் உள்ள மக்களின் பணம் சம்பாதிக்க கூடிய வேகம் பல மடங்கு அதிகமாக மாறிவிடும்.
அதற்கேற்றார் போல் நீங்களும் உங்களுடைய அறிவையும் எப்பொழுதும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
கணினிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த உலகில் தொழில்நுட்பங்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் இதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
சந்தைப்படுத்தல் குறிப்புகள் (Marketing Tips)
நீங்கள் தொழில் செய்யலாம் அல்லது முதலீடு செய்யலாம் அல்லது ஒரு நிறுவனத்தில் வேலை செய்யலாம் உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு அடிப்படை விற்பனை பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
உங்களுக்குத் தேவைப்படும் பொருட்கள் வாங்குவதற்கு நீங்கள் செலவு செய்யும் பொழுது.
விற்பனை குறித்த சில தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் உங்களுக்கான பணம் எப்பொழுதும் சேமிப்பாகும்.
விற்பனை பற்றிய தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வது உங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் எல்லா நேரம் சூழ்நிலைகளும் உங்களுடைய பணத்தை சேமிப்பு படுத்தும்.
பண்ணைகள் (Farms)
21ம் நூற்றாண்டில் மனிதர்கள் தங்களுடைய உணவுகளில் 80 சதவீத அளவிற்கு எப்பொழுதும் இறைச்சி தேவை என விரும்புகிறார்கள்
கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, பன்றி பண்ணை, மாட்டுப் பண்ணை, தோட்டம், நர்சரி, போன்றவற்றில் நீங்கள் முதலீடு செய்யலாம் அல்லது நீங்கள் இதனை தொழிலாக செய்யலாம்.
கட்டாயம் இதன் மூலம் உங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
பண்ணைகளிலிருந்து கிடைக்கக் கூடிய முட்டை, பால், இறைச்சி, தோட்டத்தில் இருந்து கிடைக்கக்கூடிய காய்கறி பழம், இவற்றை நீங்கள் விற்பனை செய்யலாம்.
இது ஒரு அத்தியாவசியமான பொருள் என்பதால் கட்டாயம் இதனுடைய மதிப்பு என்பது இனி வரும் காலங்களில் உயரம்.
குறிப்பாக நீங்கள் இயற்கை முறையில் இதனை விளைவித்தால் அதிகப்படியான லாபம் கிடைப்பது உறுதி.
அழகு சாதன பொருட்கள் (Beauty products)
உலகில் அதிகளவில் விற்பனையாக கூடிய பொருட்களின் இப்பொழுது முதன்மையாக இருப்பது அழகு சாதன பொருட்கள்.
இப்போது மனித குல நாகரிகம் உச்ச கட்டத்தில் இருப்பதால் ஒவ்வொரு நபரும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் அழகு சாதன பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
அழகு சாதன பொருட்கள் பற்றி இணையதளத்தில் தேடல்கள் என்பது எப்பொழுதும் அதிகம்.
நீங்கள் அழகுசாதன துறையில் முதலீடு செய்யலாம் அல்லது ஒரு நிறுவனத்தையும் தொடங்கலாம் இதனால் கண்டிப்பாக உங்களுக்கு பணவரவு அதிகமாக கிடைக்கும்.
ஆடை துறைகள் (Apparel Departments)
நீங்கள் ஒரு சிறிய அளவில் டெக்ஸ்டைல் தொடங்கி உங்களுடைய சொந்த பொருட்களை இணையதளம் மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்யலாம் இதன் மூலம் நிச்சயம் உங்களுக்கு வருமானம் அதிகம்.
உலகில் அதிக அளவில் ஆடைகளை ஏற்றுமதி செய்வது இந்தியா அதிலும் குறிப்பாக தமிழகத்தில் திருப்பூர்.
இப்படி மிகப்பெரிய ஒரு வாய்ப்பு நம்மளுடைய தமிழகத்தில் இருப்பதால் கட்டாயம் இந்த தொழிலை நீங்கள் செய்தால் அதிகப்படியான லாபம் கிடைப்பது நிச்சயம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
30000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு முதல்வர் ஸ்டாலின்