Uncategorized

Valippu Disease symptoms and treatment in tamil

Valippu Disease symptoms and treatment in tamil

Valippu Disease symptoms and treatment in tamil

வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..!

பொதுவாக வலிப்பு நோய் என்பது மூளை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு கொடிய நோயாகும்.

தலைவலிக்கு அடுத்ததாக, பெரும்பாலான நபர்கள் இந்த வலிப்பு நோயால் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

இந்த வலிப்பு நோயைப் பொருத்தவரை சிறிய குழந்தைகள், இளம் வயதினர், மற்றும் முதியவர்கள் என்று அனைவரையும் பாதிக்கும்.

நோய் வர என்ன காரணம், வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும், வலிப்பு நோய் அறிகுறிகள் என்ன, என்று போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

வலிப்பு நோய் என்றால் என்ன?

வலிப்பு என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே தவிர அது ஒரு நோய் கிடையாது, அதாவது மூளை பாதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

அதிகமான காய்ச்சல், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், என்பதை அறிகுறிகளாக தெரிவிக்கப்படுவதே நோய் எனப்படுகிறது.

வலிப்பு ஏற்படும் பொழுது அவர்களுக்கு கை மற்றும் கால்கள் இழுத்துக் கொள்ளும், வாயிலிருந்து நுரை தள்ளும், கண்கள் மேலே சுழன்று, நாக்கு பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும்.

வாயிலிருந்து இரத்தம் வழிந்து, சுயநினைவு இழந்து, தரையில் விழுந்து விடுவார்கள், இருப்பினும் சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சரியாகி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்து விடுவார்கள், இதன் பெயர்தான் வலிப்பு.

வலிப்பு எதனால் ஏன் ஏற்படுகிறது?

பொதுவாக மனித உடலில் மூளை மற்றும் நரம்பு செல்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காகவே, இயல்பாகவே மனித உடல் மிகச் சிறிய அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

ஏதாவது ஒரு சில காரணத்தால் மூளையில் உண்டாகின்ற, அதிக அழுத்தத்தின் காரணமாக, இந்த மின்சாரம் அதிகமாக உருவாகி, ஒரு புயல் போல மாறிவிடும்.

இது நரம்பு வழியாக உடல் உறுப்புகளுக்கு கடத்தப்படும் போது அந்த சமயத்தில் உடலுறுப்பு இயக்கத்தில் பல வகையான மாற்றங்கள் ஏற்படும்.

இதன் காரணமாக கை மற்றும் கால்கள் இழுத்துக் கொண்டு வலி பிரச்சனை ஏற்படும்.

வலிப்பு நோய் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

தலையில் அடிபடுதல்,பிறவியிலே மூளை வளர்ச்சி குறைபாடு, மூளையில் கட்,டி ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித்தொற்று, புழுத்தொல்லை.

மூளைக் காய்ச்சல், மூளைக் உறை அலர்ஜி காய்ச்சல், போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது, என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு நபருக்கு உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள், போன்றவையும் வலிப்பு நோய், வருவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கிறது.

அல்லது உடலில் வலிப்பு நோயை இது, போன்ற நோய்கள் தூண்டிவிடும்.

வலிப்பு உள்ளவர்களின் உறவினர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பரம்பரை, பரம்பரையாகவும்,வலிப்பு நோய் வரலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தாலும், பிரசவ காலத்தில் வலிப்பு வருவது உண்டு.

பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்த குழாய்கள் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள் சோடியம் அளவு குறைந்து போதல், போன்ற காரணங்களால் வயதான நபர்களுக்கு வலிப்புநோய் உடலில் தோன்றும்.

சில நபர்களுக்கு அதிகமான மன உளைச்சல் காரணமாக வலிப்பு நோய் உடலில் தூண்டிவிடும்.

பல நேரம் எதற்காகவும் வலிப்பு நோய் வருகிறது, என்று கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறுகிறார்கள்.

Valippu Disease symptoms and treatment in tamil

வலிப்பு நோயின் அறிகுறிகள் என்ன

திடீர் தலைவலி ஏற்படுவது, உடல் சோர்ந்து போவது, அதிகமான குழப்பமான மனநிலை, திடீர் பதட்டம், பயம், வியர்த்துப் போதல், கண் கூசுவது, அல்லது கண்கள் மங்கலான பார்வை ஏற்படுவது.

உடலில் மதமதப்பு, நடக்கும் போது தடுமாற்றம் ஏற்படுதல், இந்த அறிகுறிகள் தென்பட்டால் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு சென்று படுத்துக் கொள்வது நல்லதாக அமையும்.

வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்

ஒரு நபருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டால், அந்த நபரை இடது பக்கமாக சாய்த்து படுக்க வையுங்கள்.

சட்டை பட்டன்கள், இடுப்பு பெல்ட், போன்றவற்றை தளர்த்த வேண்டும்.

நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.

முகத்தில் அந்த நபர் கண்ணாடி அணிந்திருந்தால் மற்றும் வாயில் சேர்க்கை பல் பொருத்தி இருந்தால், அவற்றை அகற்றிவிடுங்கள்.

அவர் கையில் ஏதேனும் பொருள் இருந்தால் அகற்றி விடுங்கள், மேலும் அவர் இடத்தை சுற்றி கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி விடுவது நல்லது.

இவ்வாறு செய்வதன் மூலம் வலிப்பின் போது பாதிக்கப்பட்டவரின் உடலில் எந்த ஒரு காயம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

மின்விசிறி மற்றும் கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி ஏற்பாடு செய்யுங்கள்.

அவசரகால சில குறிப்புகள்

ஒரு நபருக்கு வலிப்பு தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

உடனே அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிக அவசியம்.

கீழாநெல்லி மருத்துவ பயன்கள் என்ன..!

அதன்பின் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே சிகிச்சை பெறும் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

Vastu Shastra for house construction in tamil

வலிப்பு வந்தவருக்கு சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும், என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0