செய்திகள்

அன்புமணி ராமதாஸ் கைது காவலாளர்களின் மண்டை உடைப்பு கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு, துப்பாக்கி சூடு, போர்க்களமான நெய்வேலி என்ன நடந்தது..!What Happened PMK Party protest against NLC

What Happened PMK Party protest against NLC

What Happened PMK Party protest against NLC

அன்புமணி ராமதாஸ் கைது காவலாளர்களின் மண்டை உடைப்பு கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு, துப்பாக்கி சூடு, போர்க்களமான நெய்வேலி என்ன நடந்தது..!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்ததை கண்டித்து அக்கட்சியின் தொண்டர்கள் கடுமையான ஆத்திரத்தில் காவல்துறையின் மீது சரமாரியான கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் மூன்று காவல்துறையினர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது இதன்பிறகு போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர்.

தடியடி, தண்ணீர் பீச்சி, கண்ணீர் புகை குண்டு வீச்சு செய்தனர், ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களை கையாள்வதற்கு காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

என்எல்சி (NLC) நிர்வாகத்தின் இப்போகை கண்டித்தும் நெய்வேலி என்எல்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்.

நெய்வேலியில் மாபெரும் பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றார்கள்.

இப்போராட்டத்தை தொடர்ந்து நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முற்றுகையிட முயன்றனர்.

ஆனால் இதனை தடுத்த காவல்துறையினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நபர்களை கைது செய்தனர்,இதனால் கடுமையான ஆத்திரமடைந்த கட்சியின் தொண்டர்கள்.

காவல்துறைக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தினர் காவல் துறை வாகனங்கள் மீது சரமாரியான கற்கள் வீசப்பட்டது.

பாமகவினர் நடத்திய தாக்குதலில் மூன்று காவல்துறையினருக்கு மண்டை உடைந்த இரத்தம் கொட்டியது.

இதன் பிறகு இந்த சம்பவத்தை கலைப்பதற்கு காவல்துறையினர் தண்ணீர் பீச் அடித்தனர், கண்ணீர் புகை கொண்டு வீசப்பட்டது.

ஒரு கட்டத்தில் நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியச் சூடு நடத்தியது இதனால் நெய்வேலி முழுவதும் போர்க்களமானது.

ஏற்கனவே நெய்வேலியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் அண்டை மாவட்டங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

10 மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் கடலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர்,மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மார்க் மதுபான கடைகளை மூடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அன்புமணி கைதுக்கு எதிரான போராட்டம் போலீசாரின் பதில் நடவடிக்கையால் கடலூர் மாவட்டத்தில் கடுமையான பதற்றம் நிலவுகிறது.

பாமகவினர் போராட்டம் போலீஸ் தடியால் மொத்தம் ஆறு செய்தியாளர்கள் படுகாயம் அடைந்தனர்,தற்போது போலீசார் கட்டுப்பாட்டில் நெய்வேலி வந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தொடர்ந்து அழிக்கப்படும் நெற் பயிர்களும் விளை நிலங்களும்

தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டம் குறித்து ஒரு பதற்றமான சூழ்நிலை இருக்கிறது ஏனென்றால் விலை நிலங்களை அழித்து என்எல்சி நிர்வாகம் பணிகளை மேற்கொள்கிறது.

என சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் கடுமையான தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்,மேலும் விளை நிலங்கள் அழிக்கப்படுவது நேரடியாக ஒளிபரப்ப படுத்தப்பட்டதால்.

இது குறித்து பல்வேறு விதமான கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகிறது.

ஏனென்றால் விளைநிலங்கள் ஏன் அழிக்கப்படுகிறது? நெற்பயிர்கள் முற்றிலும் அழிக்கப்படுவது தடுக்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Morning drinks to lower bad cholesterol

How to change Passport photo in tamil

How to renew your old Passport in online 2023

tn rs 1000 scheme how to get form in tamil

How Check PAN card Misuse in tamil 2023

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0