
What is the e-passport in India full details
இது போதும் இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு இனி எல்லாமே சுலபம் ஏன் தெரியுமா..!
இந்தியாவில் பாஸ்போர்ட் சேவைகளை (Passport Services) எளிமையாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டு மக்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட வந்த பாஸ்போர்ட் சேவைகளில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படப்போகிறது,இது குறித்து முழுமையான தகவல்களை.
டெல்லியில் நடைபெற்ற பாஸ்போர்ட் சேவா திவாஸ் (Passport Seva Diwas Program) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் பாஸ்போர்ட் வழங்குவதை கவனமாகக் கொண்டு.
ஆண்டு கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு மிகப்பெரும் நற்செய்தியை கொடுத்து இருக்கிறார்.
பாஸ்போர்ட் சேவா புரோகிராம் வெர்ஷன் (Passport Seva Program Version) 2.0 விரைவில் பாஸ்போர்ட் (e-Passport) வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக எடுத்து வருகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதை மிகவும் அவசியமானதாகவும் அதிவேகமானதாகவும் இருக்க வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது.
அந்த வரிசையில் பழைய பாஸ்போர்ட் நடைமுறைகளை அதிரடியாக மாற்றி மக்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இ-பாஸ்போர்ட் e-passport வழங்க முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பாஸ்போர்ட் சேவா புரோகிராம் வெர்ஷன் (Passport Seva Program Version) 2.0 என்னும் சேவையை விரைவில் தொடங்க உள்ளது.
இதை சேவையின் கீழ் நாட்டு மக்களுக்கு விரைவில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்பட இருக்கிறது.
இது குறித்து பேசிய வெளிவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய மக்களுக்கு எளிமையாக அணுகக் கூடிய வகையில் வெளிப்படையாகவும்.
நம்பகமாகவும் அதே நேரத்தில் பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இதை தரத்தில் கொண்டு இ-பாஸ்போர்ட் (e-passport) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிமையாகவும் வெளிநாட்டு பயணங்கள் குழப்பமில்லாமல் நடக்கும்.
இந்த சேவையை வழங்க இந்தியாவில் வெளிநாட்டிலும் பாஸ்போர்ட் சேவை மைய அலுவலர்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால் விரைவில் இ-பாஸ்போர்ட் (e-passport) வழங்கப்பட இருக்கிறது.
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?
இ-பாஸ்போர்ட் (e-passport) என்பது முன்பு பயன்படுத்தி வந்த பழைய பாஸ்போர்ட் களை போலல்லாமல் சிப் பொருத்தப்பட்டு வழங்கப்படும்.
இதன் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு, உள்நாட்டு பயணங்கள் டிக்கெட் விவரங்கள் உள்ளிட்டவை சோதனை செய்வதில் எளிமையாக இருக்கும்.
அதே போல் உனது கைரேகை,முகம் மற்றும் உடலின் சில அங்க அடையாளங்கள்,இந்த புதிய பாஸ்போர்ட்டில் மின்னணு முறையில் பதிவேற்றப்படும்.
இதன் மூலம் போலியாக பாஸ்போர்ட் தயாரித்து எங்கும் சென்று விட முடியாது,அதேபோல் பாஸ்போர்ட் தொலைந்தால், திருடப்பட்டால், வேறு யாராவது எடுத்துக்கொண்டால், அதை திரும்ப பெறுவது மிக எளிதாக மாறிவிடும்.
இதனால் வெளிநாட்டில் வேலைக்கு சென்று சிக்கிக் கொள்ளும் அப்பாவி ஏழை எளிய இந்திய மக்களை எளிதாக அடையாளம் அடையாளம் காண முடியும் இதன் மூலம் இப்படி பல்வேறு நன்மைகள் இருக்கிறது.
அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதிலும் இ-பாஸ்போர்ட் வழங்கப்படுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Patta or Pathiram Important News in tamil
TN Women Rs 1000 scheme details
வாரிசு சான்று வாங்க தேவையான ஆவணங்கள்