
What steps should you take against coronavirus
இந்தியாவில் ஓமிக்கிரான் நுழைந்து விட்டதால் அதனிடமிருந்து தப்பிக்க என்னென்ன செய்யவேண்டும் தெரிந்துகொள்ளுங்கள்..!
கொரோனா வைரஸின் 2வது அலையால் ஏற்பட்ட பேரழிவை இன்னும் நம்முடைய நாடு மறக்காத நிலையில் நமக்கு தெரிந்த பல நபர் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள்.
பலர் கொரோனா வைரஸ்லிருந்து குணமடைந்தவர்கள் இருந்தும் முழுவதும் வெளியே வருவதற்கு முன் புதிய கவலைக்குரிய உருமாற்றம் ஓமிக்கிரான் இந்தியா எல்லைக்குள் நுழைந்து விட்டது.
கர்நாடகாவில் 2 நபர்களுக்கு நோய்த்தொற்று பாதிக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் டெல்லியில் 1 நபர் மற்றும் மகாராஷ்டிராவில் 1 நபர் என இந்தியாவில் இதுவரை 4 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இது இந்தியா முழுவதும் கடுமையான அதிர்ச்சியும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் நாம் இன்னும் மிக கவனமுடன், பொறுப்புடன், விழிப்புணர்வுடன், இருக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் மக்கள் இந்த வைரஸில் இருந்து தப்பிக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்று இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
மோசமான நிலைக்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்
மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதல் இரண்டு நிகழ்வான ஓமிக்கிரான் மாறுபாடு இப்பொழுது இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளும் கண்காணிப்பை மிகத் தீவிரப்படுத்த வேண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் எந்த இறக்குமதியும்.
விரைவாகக் கண்டறிந்து வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
ஓமிக்கிரான் உட்பட அனைத்து மாறுபாடுகளுக்கான பதில் நடவடிக்கைகளுக்கு SARs COVID-2 சமமானதாகும் அரசாங்கங்களின் விரிவான மற்றும் நடவடிக்கையை.
பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் மற்றும் தனிநபர்களின் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது அவசியம், என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்த மாறுபாடு மிகவும் கடுமையானதாக இருக்குமா
புதிய covid-19 மாறுபாடு ஸ்பைக் புரதத்தில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய கொரோனா வைரஸ் விவரங்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.
தடுப்பூசி மூலம் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்ப்பதற்கு இது அதிக வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்திய அறிக்கையின்படி ஓமிக்கிரான் மாறுபாட்டின் 400 வழக்குகள் 29 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 4 இந்த வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது முந்தைய வகைகளை காட்டிலும் புதிய வகை தொற்று 500% அதிகமாக பரவலாம் என்று உலக சுகாதார அமைச்சகம் ஒரு எச்சரிக்கையை தெரிவித்துள்ளது.
வைரஸ்கள் எப்படி மாற்றமடைகிறது
மருத்துவ நிபுணர்களின் கூற்றின்படி வைரஸ்கள் அவற்றின் உயிர் வாழ்விற்காக உருமாற்றம் அடைகிறது, இது அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் பொருந்தும்.
இந்தப் பிறழ்வுகள் காரணமாக அதன் வெளிப்பாடுகள் மற்றும் சிகிச்சையில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.
கோவிட் -19 நோய்த்தொற்று உடன் தொடர்புடைய பிரச்சினைகள் வைரஸ்களை கட்டுப்படுத்த அல்லது கொல்ல மனிததிசுக்களின் பிரதிபலிப்பினால் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முந்தைய வைரஸ் மாறுபாடு உடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது
WHO அறிக்கையின்படி covid-19 நோய் தொற்றுகளில் ஒரு தீங்கு விளைவிக்கும் மாற்றத்தை குறிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் WHO ஆனது B.1.1.529 ஐ ஓமிக்கிரான் என்ற கவலையின் மாறுபாடாக நியமித்துள்ளது.
Covid-19ல் மற்றொரு பெரியஎழுச்சி ஏற்பட்டால், ஓமிக்கிரான் விளைவுகள் இந்த உலகத்தில் கடுமையாக இருக்கலாம் என்று மேலும் கூறியுள்ளார்கள்.
இந்தியாவில் 2வது கொரோனா வைரஸ் அலைக்கு வழிவகுத்த டெல்டா மாறுபாடு உடன் ஒப்பிடும்போது புதிய மாறுபாடு ஸ்பைக் புரதத்தில் அதிக பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.
இது சற்று அதிகமாக உருவாகி மேலும் பரவ கூடியதாக இருக்கும்.
ஆனால் புதிய மாறுபாடு உடன் தொடர்புடைய உயிரிழப்பு நிகழ்வுகள் எதுவும் இல்லை என்றாலும் டெல்டா விவகாரத்தை விட மாறுபாடு மிகவும் கடுமையானதாக என்பது பற்றி இன்னும் முழுமையான ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை.
தடுப்பூசிகள் இந்த புதிய மாறுபாட்டுக் எதிராக செயல்படுமா
ஓமிக்கிரான் மாறுபாடு அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால், தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து, தப்பிக்க திறனுடன் தொடர்புடைய பல கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
எந்த ஒரு தடுப்பூசியும் 100% நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கப்படுவதில்லை மற்றும் திருப்புமுனை நோய்த்தொற்றுகள் நிகழ்வுகள் கடந்த காலத்தில் காணப்பட்டாலும்.
தற்போதுள்ள தடுப்பூசிகள் நோயின் தீவிரத்தை குறைந்தபட்சம் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது, என்று உலக சுகாதார நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இப்பொழுது அனைவரும் மிக மிக கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்.
வைரஸ்ன் 2வது அலை நம் வாழ்க்கையை பெரிதும் புரட்டிப் போட்டுவிட்டது, மக்கள் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டார்கள்.
பல சோகமான நிகழ்வுகளை கடந்து விட்டாலும், அது நம் நாட்டுக்கு கற்றுத் தந்த பாடங்களை மறந்துவிட முடியாது.
இதற்கு முன்பு எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை விட இனி வரும் காலங்களில் எடுக்கப்படும் தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மிக மிக முக்கியத்துவம் நாம் கொடுக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் நம்முடைய அரசாங்கம் தெரிவிக்கும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளை.
Tamil Nadu receives heavy rainfall in December
சரியாக பின்பற்றினால் போதும், இந்த நோய் தொற்றிலிருந்து நீங்கள் எளிமையாக தப்பித்துவிடலாம்.