செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை எப்போதுதான் குறையும் மத்திய அரசு வெளியிட மிக முக்கியமான செய்தி..!When will the price of petrol and diesel decrease

When will the price of petrol and diesel decrease

When will the price of petrol and diesel decrease

பெட்ரோல் டீசல் விலை எப்போதுதான் குறையும் மத்திய அரசு வெளியிட மிக முக்கியமான செய்தி..!

இந்தியாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவது எரிபொருள் மட்டுமே.

நம் நாட்டிற்கு தேவையான எரிபொருள்களில் 80 சதவீத அளவிற்கு நாம் வெளிநாடுகளில் இறக்குமதி செய்கிறோம்.

நம் நாட்டில் போதிய அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி இல்லை இதனால் இந்தியாவின் பொருளாதாரம் எப்பொழுதும் பாதிக்கப்படுகிறது.

இதற்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது மின்சார வாகனங்கள் விற்பனை ஊக்குவிக்கிறது.

பெட்ரோலில் குறிப்பிட்ட அளவு எத்தனால் (Ethanol) கலக்கிறது இதனால் வரும் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் அளவு கணிசமாக குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் விலைவாசியிலும் முக்கிய பங்கு வகிக்கும் பெட்ரோல்,டீசல் விலை பல மாதங்களாக கிட்டதட்ட 200 நாட்களுக்கு மேலாக ஒரே விலையில் இருப்பதும் மட்டுமில்லாமல்.

லிட்டர் 100 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது சர்வதேச சந்தையில் கச்சையினை விலை ஒரு பேரல் 88 டாலருக்கு அதற்கு கீழ் வந்தால்.

பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

ஏப்ரல் மாதம் இந்தியா இறக்குமதி செய்து வந்த கச்சா எண்ணையின் சராசரி ஒரு பேரல் விலை 83.76 டாலர் இதே மேம்பாலம் 74.93 டாலர் ஜூலை மாதம் 78.34 டாலர்.

ஆனாலும் மத்திய அரசு,கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருக்கிறது.

இதோடு எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களும் தற்போது ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிலான லாபத்தை தினம் தோறும் பெற்று வருகிறது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், ஆகியவை இந்தியாவில் ரீடைல் பிரிவில் அதாவது சில்லறை விற்பனைகளில் எரிபொருளை விற்பனை செய்கிறது.

ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகிறது,இதன் மூலம் நடப்பு ஆண்டில் இந் நிறுவனங்கள் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மிகப்பெரிய லாபத்தை பெற உள்ளன.

கடந்த ஆண்டு 60,000/-கோடி ரூபாயாக இருந்தது இது மட்டும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், ஆகியவை சுத்திகரி பொருட்கள் மூலம் கூடுதலாக சில விற்பனை பொருட்களை பெற்று இருக்கிறது.

இது அனைத்தும் மத்திய அரசு நீண்ட காலமாக பெட்ரோல் விலையை தொடர்ந்து 100 ரூபாய் அதிகமாக வைக்கப்பட்ட காரணத்தால் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் முக்கிய கோரிக்கை என்ன?

எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தேவையான அளவு லாபத்தை பெற்று விட்ட பிறகும் எரிபொருட்களின் மீதான வேலையை குறைக்காமல் இருப்பது ஏன் என பொதுமக்கள் தங்களுடைய கேள்விகளை கேட்கிறார்கள்.

மிக நீண்ட நாட்களாக எரிபொருளின் விலை என்பது இந்தியாவில் குறையாமல் இருக்கிறது இதனை கணிசமான அளவில் குறைக்க வேண்டும் என.

தொழில் துறை நிறுவனங்களும், பொதுமக்களும், மத்திய அரசுக்கு தொடர்ந்து சமூக வலைத்தள மூலம் கோரிக்கை வைத்து வண்ணம் இருக்கிறார்கள்.

இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் அதாவது பண்டிகை மாதங்களில் தீபாவளி, தசரதா, விநாயகர் சதுர்த்தி, போன்ற மாதங்களில்.

பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Morning drinks to lower bad cholesterol

How to change Passport photo in tamil

How to renew your old Passport in online 2023

tn rs 1000 scheme how to get form in tamil

How Check PAN card Misuse in tamil 2023

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0